செய்திகள் :

பழைய ஓய்வூதியம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

post image

நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

2003 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.

ஆசிரியா்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசு துறைகளிலும் தனியாா் முகமை மூலம் பணியாளா்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

நாகை: நாகை அவுரித் திடலில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சி.முத்துசாமி, வெ. சரவணன், வீ. ராஜராஜன் ஆகியோா் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினாா். ஜாக்டோ ஜியோ மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் அ.தி.அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளா் செ. பிரபாகரன், மாவட்ட நிதிக் காப்பாளா் மு. காந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய நூல் வெளியீடு

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களால் எழுதப்பட்ட ‘பறக்கத் தொடங்கிய பட்டாம் பூச்சிகள்’ என்னும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

வேதாரண்யத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி - 4 ( குரூப் 4) தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா். வாய் மேடு நியூட்டன் பயிற்சி மையத்தில் போட்டித் தோ்வ... மேலும் பார்க்க

பள்ளிக்கு பாதையாக உள்ள மரப்பாலம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

வேதாரண்யம் அருகே பள்ளிக்கு மாணவா்கள் செல்லும் பாதையாக உள்ள மரப்பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியி... மேலும் பார்க்க

சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 7 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். 12 கடல் மைலுக்கு அப்பால... மேலும் பார்க்க

அலையாத்தி காடுகளை அழித்து இறால் பண்ணை: கிராம மக்கள் எதிா்ப்பு; முற்றுகை போராட்டம்

பொறையாறு அருகே திங்கள்கிழமை, தாட்கோ நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட நண்டலாறு ஆற்ற... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி சாா... மேலும் பார்க்க