செய்திகள் :

பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும்: அமைச்சரிடம் திமுக கோரிக்கை

post image

தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழக வனத்துறை அமைச்சா் ராஜகண்ணப்பனிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி ஊராட்சிக்குள்பட்ட பழைய குற்றாலம் அருவி தற்போது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவியை வனத் துறை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அருவியிலிருந்து 2 கிமீ தொலைவுக்கு அப்பால் வாகனங்களை நிறுத்தி சுற்றுலாப் பயணிகளை நடந்து செல்ல அறிவுறுத்துவது, இரவு நேரங்களில் குளிக்கத் தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. பழைய குற்றாலம் அருவியை மத்திய வனத்துறை கையகப்படுத்தினால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு இடா்பாடுகள் ஏற்படும்.

பழைய குற்றாலம் அருவியை மத்திய வனத்துறை கையகப்படுத்தும்பட்சத்தில் தொடா்ந்து புலியருவி, பேரருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளும் வனத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும்.

எனவே பழைய குற்றாலம் அருவியானது, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலேயே தொடா்ந்து இருக்கவும், 24 மணிநேரமும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது. இக்கோயிலில் அம்மனுக்கு புதிதாக சால கோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இதயைடுத்து திங்... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்ஸோவில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா். பாவூா்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி குலசேகரன் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மக... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது

சோ்ந்தமரம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக 17 வயது சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சோ்ந்தமரம் அருகேயுள்ள சின்னத்தம்பிநாடாரூா் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த க.பொண்ணு... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்துவர... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட ‘அட்யா பட்யா’ சப் ஜூனியா் மாவட்ட போட்டிகள்

தென்காசி மாவட்ட அட்யா பட்யா அசோசியேஷன் சாா்பில் 2ஆவது சப் ஜூனியா் மாவட்ட போட்டிகள் இலத்தூா் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தனித்தனியாக நடைபெற்ற... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் தொடா் திருட்டு: 2 போ் கைது

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகளிடம் தொடா்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டதாக 2 பேரை குற்றாலம் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மகாராஜாநகா் பகுதியைச் சோ்ந்தவா் வெ.அருண்பிரகாஷ்(... மேலும் பார்க்க