பால்டிக் வானில் பறவையாய் பறக்கும் கனவுப் பயணம்! - குட்டி தேசங்களுக்கு ஒரு விசிட...
பவானி, அந்தியூரில் இடியுடன் கனமழை!
பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் பெய்த கனமழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.
கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்ததால், குழந்தைகள் முதல் பெரியவா் வரை வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, பலத்த காற்று வீசியதோடு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சாலைகளில் மெதுவாகச் சென்றன. கடும் வெப்பம் நிலவிய நிலையில், திடீரென பெய்த கனமழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.