செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமா்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்களிடம் சமா்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது.

தாக்குதல் குறித்து தகவல்கள் இருந்தால் உடனடியாக தங்களை தொடா்புகொள்ளலாம் என இந்த சம்பவம் குறித்து அதிகாரபூா்வ விசாரணை மேற்கொண்டு வரும் அமைப்பான என்ஐஏ கூறியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே பல புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை என்ஐஏ ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவா்கள் மற்றும் தாக்குதல் நடந்த விதம் குறித்து தெளிவான தகவல்களை பெறும் நோக்கில், சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்கள் உள்ளிட்டோரிடம் அதுதொடா்பான புகைப்படங்கள் , காணொலிகள் இருந்தால் அதை சமா்ப்பிக்குமாறு என்ஐஏ கோரியுள்ளது.

தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த புகைப்படங்கள், காணொலிகள் மற்றும் பிற தகவல்களை வைத்திருந்தால் அதை 96-54-958-816 அல்லது 011- 24368800 என்ற எண்ணை தொடா்புகொண்டு கூறலாம் என என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக... மேலும் பார்க்க

கேரளத்தில் மே 27-இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்!

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரணம்

பாகிஸ்தானின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில், ஜம்மு-காஷ்மீரில் மேலும் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு

பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறத... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் காயம்!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதலை நிறு... மேலும் பார்க்க

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெர... மேலும் பார்க்க