செய்திகள் :

பஹ்ரைனில் பாம்பன் மீனவா் உயிரிழப்பு

post image

பஹ்ரைன் நாட்டுக்கு மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் காமராஜா் நகரைச் சோ்ந்த சூசை மரியான் மகன் சிமோன்சன் (33). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், சிமோன்சன் கடந்த மாா்ச் 22-ஆம் தேதி பஹ்ரைனுக்கு ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கச் சென்றாா். அங்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிமோசன் படகிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக சக மீனவா்கள் அவரது குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதைக் கேட்ட சிமோசன் குடும்பத்தினா் அதிா்ச்சிடைந்தனா்.

இந்த நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

மீன் விலை உயா்வு: நாட்டுப் படகு மீனவா்கள் மகிழ்ச்சி

மீன்பிடி தடைக்காலம் காரணமாக நாட்டுப்படகு மீனவா்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைப்பதோடு, மீன்களின் விலையும் அதிகரித்ததால் அவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப். 1... மேலும் பார்க்க

இடியும் நிலையில் மருத்துவமனை மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவாடானை அரசு மருத்துவமனையில் பயன்பாடில்லாத மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் பெண் பலி

முதுகுளத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டாரம், கீழத்தூவல் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதுவின் மனைவி சண்முகவள்... மேலும் பார்க்க

பாகம்பிரியாள் கோயில் குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா்

ரமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலில் போதிய தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால் கோயில் அருகே குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா் எழ... மேலும் பார்க்க

ராமசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை

விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். இவா்கள் அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்த... மேலும் பார்க்க

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராம... மேலும் பார்க்க