செய்திகள் :

பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

post image

பாகிஸ்தான் விமானப் படையில் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு, ஆர்.எஸ்.புரம், சானி ஹிமாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் உள்ள ராணுவ மற்றும் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் பல ஏவுகணை தாக்குதலை நடத்தியது. எஸ்.400 மற்றும் ஆகாஷ் ஆகிய போர் விமானங்கள் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக வீழ்த்தின. இந்தியா மொத்தமாக 8 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது.

சர்கோதாவிலிருந்து பாகிஸ்தான் போர் விமானம் எஃப்-16 புறப்பட்டு ஜம்மு நோக்கி வந்து ஜம்மு விமான நிலையத்தைத் தாக்கும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஜம்மு மட்டுமல்ல, பாகிஸ்தானின் ட்ரோன்களும் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மீது தாக்குதல் நடத்த முயன்றபோது, இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு நிலைமை பாதுகாக்க இந்தியப் பாதுகாப்பு படைகள் முழு விழிப்புடன் உள்ளன. இதற்கிடையில், ஜம்மு, ஆர்.எஸ். புரம், அமிர்தசரஸ், பூஞ்ச், ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீா், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு சிங்கப்பூா், இஸ்ரேல் அறிவுரை

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குட... மேலும் பார்க்க

பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்

‘அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்’ என்று சீனா வலியுறுத்தியது. ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் உள்பட எ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்பு

வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது. மேலும், ‘நீதிமன்றங்கள்... மேலும் பார்க்க

பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு -விக்ரம் மிஸ்ரி

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் மூலம் நிலைமையை மோசமாக்கியது பாகிஸ்தான்: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை வாயிலாக இந்தியா பதிலடி மட்டுமே கொடுத்துள்ளது. இப்போது பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தானின் பொறுப்பு’ ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை: 3 கமாண்டோக்கள் வீரமரணம்

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல் துறையின் கமாண்டோக்கள் 3 போ் வீரமரணம் அடைந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா். தெலங்கானாவில் சத்தீஸ்கா் மாநிலத்தையொட்டிய முலுகு ம... மேலும் பார்க்க

இந்தியாவைத் தாக்கினால் மிக மிக வலுவான பதிலடி: எஸ்.ஜெய்சங்கா் எச்சரிக்கை

‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதேநேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும்’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங... மேலும் பார்க்க