செய்திகள் :

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 தீவிரவாதிகள் பலி, 6 காவலர்கள் காயம்!

post image

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் துணை ராணுவ நிலை மீது தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 காவலர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு வஜீரிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பன்னு மாவட்டத்தில் ஃபெடரல் கான்ஸ்டாபுலரி லைன்ஸ் (FC லைன்ஸ்) பிரதான வாயில் அருகே வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை தற்கொலை படையினர் மோதியதாக மாவட்ட காவல்துறை அதிகாரி சலீம் அப்பாஸ் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புக்குப் பிறகு ஐந்து தீவிரவாதிகள் எஃப்சி லைன்ஸ் மீது தாக்குதல் நடத்தி அலுவலக கட்டடங்களைக் கைப்பற்றினர். பயங்கரவாதிகளில் ஒருவர் அங்குள்ள பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த மோதல்களில், காவல்துறை, துணை ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கைகளில் மேலும் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சண்டையின்போது, ​​கண்டோன்மென்ட் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) படுகாயமடைந்தார், மேலும் ஐந்து போலீஸார் காயமடைந்தனர்.

மாவட்ட தலைமையக மருத்துவமனையில் காயமடைந்தவர்களைத் துணை காவல் கண்காணிப்பாளர் (டிஐஜி) பன்னு சஜ்ஜாத் கான் பார்வையிட்டார்.

மாவட்ட காவல்துறை அதிகாரி சலீம் அப்பாஸ் கூறுகையில், பன்னுவில் எந்தவொரு பயங்கரவாதச் செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது, பயங்கரவாதிகளை ஒருபோதும் முஸ்லிம்கள் என்று அழைக்கமுடியாது என்று அவர் தெரிவித்தார்.

At least five terrorists were killed and six policemen injured in a gun battle that ensued after a suicide bomber attacked a paramilitary post in Pakistan's restive Khyber Pakhtunkhwa province on Tuesday, according to officials.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1400 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!

திரிபுராவில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திப்ரா மோத்தா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தெலங்கானா ஆளுநர் மகனிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற... மேலும் பார்க்க

பிகார் தாய்மார்கள் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவமரியாதையாகப் பேசிய காங்கிரஸ் கட்சிக்கு பிகார் தாய்மார்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். பிகாரில்... மேலும் பார்க்க

ஜம்முவிலிருந்து பழங்கள் எடுத்துச் செல்வது கடுமையாக பாதிப்பு: ‘சரக்கு ரயில் சேவை அவசியம்!’ -மெஹபூபா முஃப்தி

ஜம்மு - காஷ்மீரில் மழைக்காலத்தில் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுவதால் அங்கிருந்து பழங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதில் தாமதமும் அதனால் மேற்கண்ட உணவுப் பொர... மேலும் பார்க்க

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவு!

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த மராத்தா சமூகத்தின் முக்கிய தலைவர் மனோஜ் ஜ... மேலும் பார்க்க

ரூ. 20 ஆயிரத்தில் அதிக பேட்டரியுடன் ஸ்மார்ட்போன்! ரியல்மி 15டி அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 15 டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. ரூ. 20 ஆயிரம் விலையில் 7000mAh பேட்டரி திறனுடன் 50MP கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள நடுத... மேலும் பார்க்க