செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

post image

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.

இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்திய நிலையில், அவை இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இதன் மூலம், பாகிஸ்தானுக்கு பின்னணியில் சீனா செய்த உதவிகள் வெளிச்சத்துக்கு வந்திருப்பதோடு, இந்திய மண்ணில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன ஏவுகணைகள் மூலம், அதன் உருவாக்க தொழில்நுட்பத்தையும் இந்தியா கண்டுபிடித்துவிடுமோ என்ற அச்சத்தில் சீனா இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியா மீது சுமார் 40 ஜெட் விமானங்கள், அமெரிக்காவின் எஃப்-16 வைப்பர்ஸ், சீனாவின் ஜே-10சி மற்றும் ஜேஎஃப்-17 வகை போர் நிமானங்களையும் பிஎல்-15இ என்ற வானிலிருந்து வானிலிருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளையும் பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்தது.

பாகிஸ்தானுக்குப் பின்னணியில் இதுவரை மறைமுகமாக செயல்பட்டு வந்த சீனத்தின் முகம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. அதோடு, இந்திய தாக்குதல் நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் வான்பாதுகாப்பு அமைப்பு மற்றும் செயற்கைக்கோள் அமைப்பு மூலம் கண்டறிந்து பாகிஸ்தானுக்கு சீனா தெரிவித்துள்ளதாகவும் இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதலின்போது, பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்டு இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிஎல்-15இ ஏவுகணைகளின் சேதமான பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

ஏவுகணையின் பகுதிகளில், அதன் உந்துவிசை, தகவல், தரவு இணைப்பு, உள்செயலாக்க அலகு உள்ளிட்டவை சேதமடையாமல் அப்படியே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேதமடைந்த ஏவுகணை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இதோடு, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள், ஏவுகணையின் இரட்டைத்திறன் மோட்டார் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து விவரங்களைத் தெரிவிக்குமாறு கோரியுள்ளன. இது சீனாவின் மிக வேகமாக வளரும் இராணுவ தொழில்நுட்பம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் உலக நாடுகளின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

இந்த சேதமடைந்த ஏவுகணையின் மூலம், அதன் மீள்உருவாக்கத்தை பாதுகாப்புப் படை பொறியாளர்கள் ஏற்படுத்துவார்கள் என்றும், மேம்படுத்தப்பட்ட பல ஏவுகணைகளின் தொழில்நுட்பத்தைக் கண்டறிவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனால், தனது ஏவுகணை தொழில்நுட்பம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குத் தெரிந்துவிடுமோ என்ற கவலையில் சீனா இருப்பதர்கவும் கூறப்படுகிறது.

பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் குழு!

பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே வார்த்தைகள், என பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் உறுப்பினர், சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரேஸில் நாட்டில் அடுத்த மாதம் (ஜூலை 6) பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்ட... மேலும் பார்க்க

பெங்களூரு: காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்! - முதல்வர் உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையர் உள்பட 5 உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில், போதிய பாதுகா... மேலும் பார்க்க

கரோனா பரவல்: கர்நாடகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித... மேலும் பார்க்க

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது. கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்ன... மேலும் பார்க்க