செய்திகள் :

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவே காரணம்! அமித் ஷா

post image

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத்தில் பங்கேற்று அமித் ஷா இன்று உரையாற்றினார்.

அப்போது, முந்தைய போர்களில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து அவர் விமர்சித்துப் பேசியதாவது:

”முப்படைத் தளபதிகள் கூட்டத்தில் பதிலடி கொடுக்க மோடி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கெஞ்சியதால்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்திய படைகள் பாகிஸ்தானின் போர் விமானங்கள் இயக்க முடியாத வகையில், விமான தளங்களை அழித்ததே, அவர்கள் தாமாக போர் நிறுத்தத்துக்கு முன்வர காரணாமாக அமைந்தது. தற்போது நடப்பது மோடி ஆட்சி, மன்மோகன் சிங் ஆட்சி அல்ல.

பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலை அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தாக்குதலுக்கும் நாங்கள் பதிலடி கொடுத்துள்ளோம்.

உரி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துல்லிய தாக்குதலை நடத்தினோம். தற்போது பல கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளை அழித்துள்ளோம்.

இந்த சமயத்தில் முந்தைய போர் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம். அவரின் ஆட்சியில் சிந்து நதியின் பகிர்வு 80 சதவிகிதம் பாகிஸ்தானுக்கு வழங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1971 போரில் நாடே இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்தது. பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தது வரலாற்றில் எப்போதும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றாமல் சிம்லா ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போதே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பெற்றிருந்தால், இன்று பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு அவசியமே இருந்திருக்காது.

நீங்கள் பாகிஸ்தானுக்கு நற்சான்று அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? எவ்வித அதிகாரமும் இல்லை.

சீனாவுடனான போரின் போது 30,000 க்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் நேரு ஆட்சியில் சீனாவுக்கு வழங்கப்பட்டது. நேரு, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி என மூன்று தலைமுறைகளைக் கடந்து அவர்களுக்கு சீனாவின் மீது அனுதாபம் உள்ளது.

உரக்கப் பேசுவதால் உண்மையை மறைத்துவிட முடியாது.” எனத் தெரிவித்தார்.

Union Home Minister Amit Shah has said that Nehru's war policy is the reason for the existence of Pakistan-occupied Kashmir.

இதையும் படிக்க : பஹல்காம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்! அமித் ஷா

விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் சௌஹான்

வேளாண் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.விவசாயிகளின் வ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:சொந்த வருவாய்க்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு உதவும் மத்திய திட்டங்கள... மேலும் பார்க்க

"ஆபரேஷன் சிந்தூர்': இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்துக்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அத... மேலும் பார்க்க

புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க்கிழமை காலமானாா்.உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியாணா மாநிலம் கு... மேலும் பார்க்க

இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசாா்’ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது... மேலும் பார்க்க

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்த... மேலும் பார்க்க