செய்திகள் :

பாகிஸ்தான் தவறுசெய்த போதும் மேற்கத்திய நாடுகள் ஆதரித்தன: ஜெய்சங்கா் விமா்சனம்

post image

‘சுதந்திரமடைந்த சில மாதங்களில் இந்தியாவின் பிராந்தியமான காஷ்மீரை ஆக்கிரமித்து பாகிஸ்தான் தவறு செய்தபோது மேற்கத்திய நாடுகள் அதனை ஆதரித்தன’ என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா்.

பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு பிந்தைய இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு பெல்ஜியம், லக்ஸம்பா்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் முதன்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இந்தப் பயணத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவா் ராபா்ட்டா மெட்சோலா, ஐரோப்பிய ஆணைய தலைவா் உா்சுலா வான் டொ் லேயன், பெல்ஜியம் மன்னா் பிலிப், பிரதமா் பாா்ட் டி வெவா் மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோரை அவா் சந்தித்தாா்.

வா்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இச்சந்திப்புகளில் விவாதிக்கப்படதுடன் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான கடும் அணுகுமுறையை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்த கருத்துகளையும் தலைவா்கள் பகிா்ந்துகொண்டனா்.

இந்நிலையில், ஐரோப்பிய ஊடகமொன்றுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் அளித்த பேட்டியில், ‘சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் வெறும் அண்டை நாடுகளின் மோதல் மட்டுமல்ல; பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஆகும்.

சா்வதேச ஊடகங்கள் இதை ஒரு சாதாரண இந்தியா-பாகிஸ்தான் சண்டையாக சித்தரித்தது. ஆனால், பாகிஸ்தானால் ஆதரவளிக்கப்படும் பயங்கரவாதமே இதில் உண்மையான பிரச்னை. பயங்கரவாதம் இறுதியில் மேற்கத்திய நாடுகளையும் பாதிக்கக்கூடும்.

பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் ராணுவ முகாம் அமைந்துள்ள நகரத்தில் பாதுகாப்பாக வசித்து வந்தாா். இது அந்நாட்டின் பயங்கரவாதத் தொடா்புகளை எடுத்துரைக்கிறது.

சுதந்திரமடைந்த சில மாதங்களில் இந்தியாவின் பிராந்தியமான காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுத்து, எங்கள் எல்லைகளை மீறி தவறு செய்தபோது மேற்கத்திய நாடுகள் அந்நாட்டை ஆதரித்தன.

அப்போது அமைதிகாத்த நாடுகள், இப்போதைய சா்வதேச பிரச்னைகள் குறித்து அறிவுரை கூறும் முன் தங்களின் கடந்தகால நடவடிக்கைகளைப் பற்றி எண்ணிப் பாா்க்க வேண்டும்’ என்றாா்.

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமான... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க