செய்திகள் :

பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

post image

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸான் வார்சாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு நேற்று (ஆக.21) தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நேற்று நள்ளிரவு திடீரென தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியைக் கைபற்றிய பாதுகாப்புப் படையினர் அங்கு பாகிஸ்தானின் தேசிய கொடியை ஏற்றியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேபோல், பன்னூ மாவட்டத்தில் ஓய்வுப் பெற்ற பாகிஸ்தான் ராணுவ வீரரான அடாவுல்லா என்பவரை கடத்த முயன்ற, ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் அவரைக் கொலைச் செய்துவிட்டு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை: அமெரிக்கா அறிவிப்பு! இந்தியர்கள் மட்டும் 50 லட்சம் பேர்!!

15 militants have been killed in a gunfight with security forces in Pakistan's Khyber Pakhtunkhwa province, it has been reported.

ரஷியாவின் மிகப் பெரிய அணு உலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

மேற்கு ரஷியவில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப்பெரிய அணு உலைகளுள் ஒன்றான கர்ஸ்க் அணு உலையில் உக்ரைன் ஏவிய ட்ரோனால் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு சர்வதேச அணு உலை பாதுகாப்பு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. எ... மேலும் பார்க்க

போரை முடிக்குமா டிரம்ப்பின் முடிவு?

‘உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண... மேலும் பார்க்க

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளா்

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக தனது நெருங்கிய உதவியாளா் சொ்ஜியோ கோரை அதிபா் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா். இதுதொடா்பான அறிவிப்பை தனது சமூக ஊடக பக்கத்தில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டாா். அதி... மேலும் பார்க்க

வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு விசா நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவில் வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ அறிவித்துள்ளாா். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில... மேலும் பார்க்க

சீனா: பாலம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

சீனாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 4 போ் மாயமாகினா். இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறுகையில், வடமேற்கு சீனாவின் ... மேலும் பார்க்க

இலங்கை சிறை மருத்துவமனைக்கு ரணில் விக்ரமசிங்க மாற்றம்

தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்க (76), சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவருக்க... மேலும் பார்க்க