செய்திகள் :

பாஜகவுடன் கூட்டணி கிடையாது: தவெக

post image

நிச்சயமாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தவெக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடைக்காலத் தடையை விதித்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் எந்த ஒரு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்படவில்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பிலோ திமுகவின் கட்சி சார்பிலோ ஒரு வழக்குகூட வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்படவில்லை.

வழக்குரைஞர் வில்சன் அந்த வழக்கில் ஆஜராகிறார். ஆனால் திமுக கட்சி சார்பில் தொடர்ப்பட்ட வழக்கு அல்ல .நாடாளுமன்ற உறுப்பினர் ராசா வழக்கு தொடுத்திருக்கிறார் அதுவும் திமுக சார்பில் அல்ல.

திமுக லாப நட்ட கணக்கு பார்த்துதான் செயல்படும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என சொல்லிவிட்டு அவர்களுக்குத் துரோகம் செய்கிறது திமுக” என்றார்

பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ”கொள்கை எதிரி, அரசியல் எதிரி எனத் தெளிவாக எங்கள் கட்சித் தலைவர் தெரிவித்துவிட்டார். நிச்சயமாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது.” என்று அவர் தெரிவித்தார்.

மதுரையில் மழையால் வானில் சுமார் 1 மணி நேரம் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம்!

மதுரை: மதுரையில் இன்று(மே 15) கொட்டித் தீர்த்த பலத்த மழையால், மதுரை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. விமான ஓடுபாதையில் மழைநீர் வடியாததால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்த ... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை: அனைத்துப் பாடப்பிரிவினரும் சேரலாம்!

இனிமேல் பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள... மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வு முடிவு: இறுதி பட்டியல் வெளியானது!

குரூப் 1 தேர்வின் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், இறுதி பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியி... மேலும் பார்க்க

அமித் ஷா அழைக்காதது வருத்தமே: ஓபிஎஸ்

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று((மே 15) செய்தியாளர்களைச... மேலும் பார்க்க

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து!

விழுப்புரம் : பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச... மேலும் பார்க்க