செய்திகள் :

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' - அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

post image

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை திமுக உறுப்பினர்களாக இணைக்க உள்ளோம்.

செந்தில் பாலாஜி

புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை

தமிழக இளைஞர்கள் எங்களுடன் தான்  இருக்கிறார்கள். புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை. யார் சென்றாலும் துணை முதலமைச்சர் சந்திப்பார். அந்த வகையில்தான் தவெகவில் இருந்து திமுக வந்த வைஷ்ணவி உள்ளிட்டோரை சந்தித்தார்.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அப்போதை முதலமைச்சர் சொன்னார். நம் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்களுக்காக 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்களை இப்போது காணவில்லை. அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை, முதலமைச்சர் ஸ்டாலின் மீட்டுக் கொண்டிருக்கிறார்.

2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னவர்கள், இப்போது அதே பாஜகவுடன் அமைதியாக உட்கார்ந்துள்ளனர். டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் அதை சாப்பிட்டு கொண்டிருந்திருப்பார்கள். கோவையில் சுமார் 1,364 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ரூ .417 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை...

தேர்தல் நேரத்தில் வைத்துள்ள செயல்திட்டங்களை உங்களிடம் எப்படி சொல்ல முடியும். நாங்கள் தேர்தல் களத்தை எப்போதோ தொடங்கி விட்டோம். கோவை மாவட்டம் திமுகவின் கோட்டை. இங்கு  திமுகதான் இங்கு வெற்றி பெறும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`மாநில அரசு செய்த கொலை!' - DMK அரசை வெளுத்து வாங்கிய High Court | STALIN | Imperfect Show 1.7.2025

* அஜித்தை கண்மூடித்தனமாகத் தாக்கும் பகீர் வீடியோ! காவல்துறையினரின் அத்துமீறல் அம்பலம்!* திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்" - FIR சொல்வது என்ன? * மாநில அரச... மேலும் பார்க்க

"SORRY தான் பதிலா? அலட்சியத்தின் உச்சம்; கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லை" - ஸ்டாலினை சாடும் இபிஎஸ்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI விசாரணை" - ஸ்டாலின்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

திருப்புவனம்: "ரொம்ப சாரிமா... நடக்கக் கூடாதது நடந்துவிட்டது" - அஜித்குமார் தாய்க்கு ஸ்டாலின் ஆறுதல்

திருபுவனத்தில் நகை காணாமல் போன புகாரில் அஜித்குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.காவல்துறையின் இந்த எதேச... மேலும் பார்க்க

`மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி திணிப்பு வாபஸ்'-வெற்றிக்கூட்டத்தில் பங்கேற்கும் தாக்கரே சகோதரர்கள்!

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1-5வது வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு மராத்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு உத்தவ் தா... மேலும் பார்க்க