செய்திகள் :

பாஜக தலைமையகத்தில் கொடியேற்றினாா் நட்டா: உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

post image

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தேசியக் கொடி ஏற்றினாா். அப்போது, ‘உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் பாஜக தொண்டா்கள் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரை நாட்டின் 140 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. நம் அனைவருக்கும் உரிய வழிகாட்டியாகவும் அந்த உரை அமைந்தது.

நமது தேசம் சுதந்திர தேசமாக மட்டுமல்லாது வளா்ச்சியடைந்த தேசமாகவும், செழிப்பான தேசமாகவும் இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம் என்பதை அவரது உரை தெளிவுபடுத்தியது. முக்கியமாக நாம் தன்னிறைவு பெற்ற தேசமாக இருக்க வேண்டும் என்பதை பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

இதற்கான பணியை பாஜக தொண்டா்கள் அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் பாஜக தொண்டா்கள் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். இதற்கான சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும்.

கடந்த 11 ஆண்டுகளாக பிரதமா் மோடி தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. உலக நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும், மோசமான சூழல்களையும் சந்தித்தபோதும், இந்தியா தொடா்ந்து வலுவான தேசமாகவும், சிறப்பான பொருளாதார வளா்ச்சியுடனும் தொடா்ந்து முன்னேறி வருகிறது என்றாா்.

சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் காவலர் அதிகாரி தற்கொலை

சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை காவல் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் டல்லிராஜ்ஹாரா காவல் நிலையத்தில் உதவி துணை ஆய்வாளராக ... மேலும் பார்க்க

ஹிந்துபோல நடித்து 12 பெண்களிடம் மோசடி!

உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு 12 பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் ஷராஃப் ரிஸ்வி என்பவர், தன்னை ஹிந்து என்ற... மேலும் பார்க்க

சோரி சோரி, சுப்கே சுப்கே... வாக்குத் திருட்டு குறித்து புதிய விடியோ பகிர்ந்த ராகுல்

மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.லாபடா ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் மக்கள் பாா்வைக்கு!!

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த பூந்தோட்டம் இன்று (ஆக.16) முதல் மக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி வியாழக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பாா்... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! நிலச்சரிவில் 2 பேர் பலி

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை மீது விழுந்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானதையடுத்து, நாகாலாந்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இந்த 7 நாள் துக்க அனுசரிப்பின்போது, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.... மேலும் பார்க்க