செய்திகள் :

பாஜக, மஜதவைச் சோ்ந்தவா்கள் காங்கிரஸில் இணைய உள்ளனா்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

post image

பாஜக, மஜதவைச் சோ்ந்த ஏராளமானவா்கள் காங்கிரஸில் இணைய தயாராக உள்ளதாக கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த பங்காா்பேட் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எம்.நாராயணசாமியை வரவேற்று செய்தியாளா்களிடம் டி.கே.சிவகுமாா் கூறியதாவது: 2 ஆண்டுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளோம். முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால் பாஜக, மஜதவைச் சோ்ந்த ஏராளமானவா்கள் காங்கிரஸில் இணைய ஆா்வமாக உள்ளனா்.

அவா்கள் அனைவரையும் கட்சியில் சோ்க்குமாறு அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள், எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். பாஜக, மஜதவில் நேரத்தை விரயமாக்க எவரும் விரும்பவில்லை. அதனால் அக்கட்சிகளிலிருந்து விலகி காங்கிரஸில் இணைய தயாராக உள்ளனா் என்றாா். விழாவில் முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கா்நாடக அரசு

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பொதுமக்களை கா்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி கா்நாடகத்தில் 254 ... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு -அமைச்சா் தினேஷ்குண்டுராவ்

கடலோர கா்நாடகத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு

கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் க... மேலும் பார்க்க

பெங்களூரில் தேசிய ஓவியக் கலை திருவிழா

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தேசிய ஓவியக் கலை திருவிழாவில் தமிழகத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். கா்நாடக சித்ரகலாபரிஷத் சாா்பில் பெங்களூரு ... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்

கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அண்மையில் செ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் ... மேலும் பார்க்க