செய்திகள் :

பாடகி சுதா ரகுநாதனுக்கு சிறந்த இசைக்கலைஞருக்கான `சர்க்கிள் ஆஃப் சக்சஸ்' விருது

post image

கலை, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை தொடர்ந்து கொண்டாடி வரும் ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி, தனது சிறப்புமிக்க சர்க்கிள் ஆஃப் சக்சஸ் - சிறந்த இசைக்கலைஞர் விருதை, பத்ம பூஷண் விருது பெற்ற ஸ்ரீமதி சுதா ரகுநாதனுக்கு வழங்கியது.

கர்நாடக இசைக்கும் சமூகத்திற்கும் சுதா ரகுநாதன் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை பாராட்டி கௌரவித்தது.

இந்த நிகழ்வில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பத்ம பூஷண் விருது பெற்றவரான என். கோபாலசாமி, ஐஏஎஸ் (ஓய்வு) தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கர்நாடக இசையுடன் சுதா ரகுநாதனின் ஆழ்ந்த பிணைப்பை வெளிப்படுத்திய அவரது உரை நிகழ்வின் மகத்துவத்தை மேலும் உயர்த்தியது.

சர்க்கிள் ஆஃப் சக்சஸ் விருது - திருமதி சுதா ரகுநாதன்
சர்க்கிள் ஆஃப் சக்சஸ் விருது - சுதா ரகுநாதன்

இதயம் தொட்ட கௌரவம்

தனது நன்றி உரையில் ஸ்ரீமதி சுதா ரகுநாதன், "எனது இசைப் பயணம் தொடங்கிய நகரத்தில், ரோட்டரி கிண்டியிடமிருந்து இந்த கௌரவத்தைப் பெறுவது எனக்குப் பெருமையையும் நன்றியையும் அளிக்கிறது," என்றார்.

அவர் மேலும் தன்னை ஒரு கௌரவ ரோட்டேரியன் என பெருமையாகக் குறிப்பிட்டு, இந்த விருது தனது மனதில் என்றும் சிறப்பான இடம் பெறும் என்றார்.

இதயங்களை உருக்கிய இசை தருணம்

சுதா ரகுநாதன் மேடையில் "குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா" என்ற ஆன்மீகப்பாடலை பாடியபோது, அந்த தருணம் அரங்கம் முழுவதையும் உணர்ச்சியில் ஆழ்த்தி அனைவரையும் மெய் மறக்கச் செய்தது.

சர்க்கிள் ஆஃப் சக்சஸ் விருது, இடைவிடாத உழைப்பு, புதுமை மற்றும் சுய அடையாளத்தின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் சாதனையாளர்களை கௌரவிக்கிறது.

மேலும், அவர்களின் குடும்பம், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் பாராட்டுகிறது.

இவ்விருதினை இதற்கு முன் பெற்றவர்கள், மிருதங்கம் மாமேதை உமயால்புரம் கே. சிவராமன், பாடகி அனுராதா ஸ்ரீராம், விளையாட்டு வீரர் ஷரத் கமல் அசாந்தா போன்ற சாதனையாளர்கள் பெற்றுள்ளார்கள்.

சுதா ரகுநாதன்

ரோட்டரி கிண்டி தலைவர் ரோட்டேரியன் ராதா கிரிஷ் பேசுகையில், "இந்த விருது சாதனையை மட்டுமல்ல, அவர்களின் இடைவிடாத சிறப்புப் பயணத்தையும் கொண்டாடுகிறது. ஸ்ரீமதி சுதா ஜி போன்ற ஒரு பிரபலத்தை, மக்கள் மனதை வென்றவரை எங்களின் சர்க்கிள் ஆஃப் சக்சஸில் சேர்த்திருப்பது இந்த விருதின் மகத்துவத்தை மேலும் உயர்த்துகிறது," எனக் கூறினார்.

நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது நிகழ்ச்சி தலைவர் ரோட்டேரியன் ஸ்ரீகாந்த் ஆனந்தால், தொழில்முறை இயக்குநர் ரோட்டேரியன் கார்த்திகேயன் கே.எஸ்., மற்றும் கிளப் சர்வீஸ் இயக்குநர் ரோட்டேரியன் ஜெமிமா ஜெயா ஆகியோரின் துல்லியமான திட்டமிடல் மற்றும் குறைபாடற்ற ஒருங்கிணைப்பு. அவர்களின் சீரிய உழைப்பால் அந்த மாலை முழுவதும் நிகழ்ச்சி சிறப்பாகவும் தடையில்லாமல் நடைபெற்று, ஒவ்வொரு விருந்தினருக்கும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

சுதா ரகுநாதன்

ரோட்டரி கிண்டி

சமூக சேவை, தலைமைத்துவம் மற்றும் தொழில்முறை முன்னேற்றத்தில் முன்னணி வகிக்கும் ரோட்டரி கிண்டி, கல்வி, சுகாதாரம், கலாச்சார வளர்ச்சி ஆகிய துறைகளில் பல சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இளம் திறமைகளுக்கும், சாதனையாளர்களுக்கும் வலுவான மேடையை வழங்கி வருகிறது.

``MGR பற்றி என்ன கேட்டாலும் நான் சொல்லுவேன்; அவர் சொன்ன மாதிரியே வாழ்கிறேன்'' - நெகிழும் ரசிகர்!

எம்.ஜி.ஆர் டிக்‌ஷனரிதூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த ராஜாப்பா வெங்கடாச்சரி நடிகர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட அளவற்ற அன்பினால் அணிந்திருக்கும் மோதிரம், வைத்திருக... மேலும் பார்க்க

AMMA: மலையாள சினிமா நடிகர் சங்கத்தில் இணைய ஸ்வேதா மேனன் அழைப்பு; நடிகை பாவனா பதில் என்ன?

அம்மா (AMMA) அமைப்புமலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு தொடங்கப்பட்டு 31 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அம்மா அமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளா... மேலும் பார்க்க

`ஓப்பனிங்கில் 3 முதல்வர்கள்; MGR அனுப்பி வைத்த படப்பெட்டி’ - தரைமட்டமான கொடுமுடி கே.பி.எஸ் தியேட்டர்

சினிமா... இந்த மூன்று வார்த்தை போதும் நம்மில் பலரையும் ஒன்றிணைத்திட! வாழ்வில் எத்தனையோ துயரங்களையும், மிகப்பெரிய தோல்விகளையும் கண்ட ஒருவனைக் கூட பரவசமடைய வைத்து, விசில் அடிக்க வைத்து, கைதட்டிக் கொண்டா... மேலும் பார்க்க

`விஜயகுமார் பேரன் ஹீரோ; `துபாய்’ சிங்கத்தின் சம்பளம் அஞ்சு கோடி' - பிரபு சாலமனின் `மேம்போ’ ஸ்டோரி

ஒரு காலத்தில் சிங்கப்பூர், மலேசியாவில் விஜயகாந்த் நடத்திய நடிகர் சங்கத்தின் கலை நிகழ்ச்சிகள் பிரசித்தி பெற்றது. பெரும் விழாவை தனியொரு மனிதனாக தலைமையேற்று நடத்திக் காட்டியவர் தயாரிப்பாளர் காஜா மொய்தீன்... மேலும் பார்க்க

அம்மா சங்கத்துக்கு முதல் பெண் தலைமை - `ஆபாச’ சர்ச்சைகளை கடந்து ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நடிகைகள் வெற்றி

மலையாள சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி கடந்த ஆண்டு சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதைத்தொடர்ந்து மலையாள சினிமா நடிகர்கள் சங... மேலும் பார்க்க

உபேந்திரா: `'பாட்ஷா'வை விட 10 மடங்கா?’ - அன்று இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த திரைக்கதை மன்னன்

சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, 90'களில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த கன்னட இயக்குநராக, நடிகராக உச்சத்தில் இருப்பவர் உபேந்திர ராவ்.பி.காம் வரை நன்றாகப் படித்த உபேந்திர, சினிமா மீதா... மேலும் பார்க்க