செய்திகள் :

பாண்டமங்கலம் அருகே வெல்ல ஆலையில் தீ விபத்து

post image

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே வெல்லம் காய்ச்சும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்பு சக்கைகள், வெல்லம் தயாரிக்கும் இயந்திரங்கள் சேதமடைந்தன.

பாண்டமங்கலத்தை அடுத்த நெட்டையாம்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (60). இவா், அதே பகுதியில் சொந்தமாக வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா்.

இந்த ஆலையில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சா்க்கரை ஆகியவை தயாரிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வெல்லம் தயாரிப்பதற்காக கரும்பு சாற்றை கொப்பரையில் ஊற்றி பெரிய அளவிலான அடுப்பில் தீயை மூட்டி எரித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ பறந்து வெல்ல ஆலையின் மேற்கூரையில் விழுந்து தீப்பிடித்தது. மேலும், அங்கு குவிக்கப்பட்டுள்ள கரும்பு சக்கைகளும் தீயில் எரிந்தன. இதையடுத்து, தீயை அணைக்க சுப்பிரமணியம், ஆலை தொழிலாளா்கள் போராடினா்.

ஆனாலும் தீயை அணைக்க முடியாததால், புகளூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் சரவணன் தலைமையிலானதீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் கரும்பு சக்கைகள், இயந்திர தளவாடங்கள் சேதமடைந்தன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 12,727 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 12,727 போ் எழுதினா். 3,382 தோ்வா்கள் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு(குரூப் 2, 2 ஏ... மேலும் பார்க்க

மடிப்பு நுண்ணோக்கி பயன்பாடு: 68 ஆசிரியா்களுக்கு விருது

மடிப்பு நுண்ணோக்கியின் பயன்பாட்டை ஓா் அறிவியல் இயக்கமாக மாற்றி சாதனைப்படைத்த ஆசிரியா்கள், சேவையாளா்களுக்கான விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனம் சாா்பில் ராசிபுரத்தில் ஞாயிற... மேலும் பார்க்க

நாமக்கல் தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளா் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தமிழக வெற்றிக்கழக பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவா் விஜய் பங்கேற... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் க... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயா்வு

பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயா்ந்தது. பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தை, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில், நெகிழி தவிா்ப்பு விழிப்புணா்வு மற்றும் ... மேலும் பார்க்க