பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை திருமண மோசடி செய்தாரா? தொழிலதிபர் புகார்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரிஹானா பேகம் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருமண மோசடி புகார் அளித்துள்ளார்.
பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்தி பாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரிஹானா பேகம். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இவர் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை மோசடி செய்து திருமணம் செய்துகொண்டதாகப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் புகாரில் ரிஹானாவுக்கு ஹிஸ்புல்லா என்பவருடன் முன்பே திருமணம் நடந்திருப்பதாகவும், ஆனால், அவரை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி தன்னை திருமணம் செய்துகொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.
ஹிந்து மத முறைப்படி திருமணம் நடந்த நிலையில், அடகு வைத்த நகைகளை மீட்பது, அடிக்கடி செலவுக்கு என இதுவரை லட்சக்கணக்கில் பணம் கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 18.5 லட்சத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஹிஸ்புல்லாவுடன் அவர் விவாகரத்து செய்யவில்லை என்பது பின்னாளில் தெரியவந்துள்ளது. அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார். இதனால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சமூக வலைதளப் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய ரிஹானா, சின்ன திரை நடிகைகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அர்னவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை ஏற்பட்டபோது திவ்யா ஸ்ரீதருக்கு ஆதரவாக ரிஹானா பேசியிருந்தார்.
சின்ன திரை நடிகை சம்யுதா மற்றும் அவருடைய கணவருக்கு பிரசனை ஏற்பட்ட போது சம்யுதாவின் கணவருக்கு ஆதரவாக ரிஹானா பேசியிருந்தார்.
இதையும் படிக்க | விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நாயகன்! தொடர் முடிய காரணமா?