செய்திகள் :

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை திருமண மோசடி செய்தாரா? தொழிலதிபர் புகார்

post image

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரிஹானா பேகம் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருமண மோசடி புகார் அளித்துள்ளார்.

பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்தி பாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரிஹானா பேகம். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவர் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை மோசடி செய்து திருமணம் செய்துகொண்டதாகப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புகாரில் ரிஹானாவுக்கு ஹிஸ்புல்லா என்பவருடன் முன்பே திருமணம் நடந்திருப்பதாகவும், ஆனால், அவரை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி தன்னை திருமணம் செய்துகொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.

ஹிந்து மத முறைப்படி திருமணம் நடந்த நிலையில், அடகு வைத்த நகைகளை மீட்பது, அடிக்கடி செலவுக்கு என இதுவரை லட்சக்கணக்கில் பணம் கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 18.5 லட்சத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஹிஸ்புல்லாவுடன் அவர் விவாகரத்து செய்யவில்லை என்பது பின்னாளில் தெரியவந்துள்ளது. அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார். இதனால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை ரிஹானா

சமூக வலைதளப் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய ரிஹானா, சின்ன திரை நடிகைகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அர்னவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை ஏற்பட்டபோது திவ்யா ஸ்ரீதருக்கு ஆதரவாக ரிஹானா பேசியிருந்தார்.

சின்ன திரை நடிகை சம்யுதா மற்றும் அவருடைய கணவருக்கு பிரசனை ஏற்பட்ட போது சம்யுதாவின் கணவருக்கு ஆதரவாக ரிஹானா பேசியிருந்தார்.

இதையும் படிக்க | விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நாயகன்! தொடர் முடிய காரணமா?

பிஎஸ்ஜி, பயா்ன் மியுனிக் அபார வெற்றி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), பயா்ன் மியுனிக் அணிகள் அபார வெற்றி பெற்றன. இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், பிஎஸ்... மேலும் பார்க்க

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாக். அக்டோபா் 5-இல் மோதல்

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், அக்டோபா் 5-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது.13-ஆவது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பா் 30 முதல் நவம்பா் 2 ... மேலும் பார்க்க

வயதை துல்லியமாக கண்டறிய கூடுதல் எலும்பு பரிசோதனை!

ஜூனியா் கிரிக்கெட்டில் வீரா், வீராங்கனைகளின் வயதை உறுதி செய்ய கூடுதலாக ஒருமுறை எலும்பு பரிசோதனை மேற்கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது.தற்போதைய ‘+1’ நடைமுறையினால் சிலா் நூலிழையில் கூடுதலாக ஒரு சீசனில் வ... மேலும் பார்க்க

ஒரே வெற்றி: டி20 தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

அயா்லாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதலிரு ஆட்டங்கள் மழையால் ஒரு பந்து கூட வீசப்பட... மேலும் பார்க்க

புதுதில்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் - புகைப்படங்கள்

புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் குடிசைப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள்.புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் பகுதியில் வீடுகளை இழந்த நிலையில், தரையில் அமர்... மேலும் பார்க்க

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஏகே - 64?

நடிகர் அஜித்தின் 64-வது படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் குமார் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பதில் பெரிய... மேலும் பார்க்க