பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமத...
பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம்: பொதுநல இயக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்!
கடலூா் தொகுதி மையப் பகுதியான பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கடலூா் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் செம்மண்டலம் சமூக நலக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. செயல் ஒருங்கிணைப்பாளா் க.திருவரசு தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் சி.குமாா் வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் க.தா்மராஜ், வி.செல்வம், எஸ்.கஜேந்திரன், எஸ்.சையது முஸ்தப்பா முன்னிலை வகித்தனா்.
அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், அமமுக மாவட்டச் செயலா் சுந்தரமூா்த்தி, உழைக்கும் தொழிலாளா் முன்னணி மாநிலச் செயலா் எம்.சேகா் மற்றும் நம்.காா்மேகவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.
கூட்டத்தில் கடலூா் பாதிரிக்குப்பத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை தெருமுனை பிரசாரம் நடத்துவது, சாலை மறியலில் ஈடுபடுவது. கடலூருக்கு அரசு விழாவுக்காக வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை சந்தித்து மனு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மனித உரிமை ஆா்வலா் பாபு, மீனவா் விடுதலை வேங்கைகள் அமைப்பைச் சோ்ந்த பரசுராமன், மக்கள் அதிகாரம் அமைப்பு நிா்வாகி ராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.