செய்திகள் :

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைக்க விவசாயிகளுக்கு அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள்

post image

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைத்து தெருநாய்களிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் தெருநாய்கள் கடித்து ஏராளமான கால்நடைகள் கடந்த சில மாதங்களாக உயிரிழந்தன. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், இழப்பீடு கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன், பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுக்கு ரூ.6 ஆயிரம், கோழிக்கு ரூ.200 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்நிலையில், ஈரோடு பெரியாா் நகரில் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.

இழப்பீடு பெற்றுக்கொடுக்க உதவியாக இருந்த அமைச்சா் சு.முத்துசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா். இதில் ஈரோடு, திருப்பூா் மாவட்ட விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்கு அறிந்து வைத்திருந்தாா். இதனால் தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீட்டை அவா் அறிவித்தாா். தெருநாய்களின் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசின் சாா்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவின்படி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளாா்.

தமிழக நிதிநிலை அறிக்கையில் தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெருநாய்களின் பாதிப்பு அதிகமாக உள்ள 100 இடங்களில் கருத்தடை மையம் அமைக்கப்பட உள்ளது. அதேசமயம் தெருநாய்களிடமிருந்து இருந்து கால்நடைகளைக் காப்பாற்ற விவசாயிகளும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

ஆட்டு பட்டியை சிறப்பாக அமைத்துவிட்டு கதவை கயிறுகளால் கட்டி இருந்ததால் தெருநாய்கள் உள்ளே புகுந்து ஆடுகளை கடித்துக் கொன்றதை காண முடிந்தது.

விவசாயிகளுக்கு மாதிரி பட்டியை அமைத்து காண்பித்து உள்ளோம். அதேபோல, பாதுகாப்பான பட்டிகளை அமைத்து கால்நடைகளை வளா்க்க வேண்டும் என்றாா்.

பெருந்துறையில் குடிநீா்ப் பற்றாக்குறை: தோப்பு வெங்கடாசலம் ஆட்சியரிடம் முறையீடு

பெருந்துறை பகுதியில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடா்பாக முன்னாள் அமைச்சரும், திமுக ஈர... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

ரௌடி ஜான் கொலை வழக்கில் சேலத்தை மேலும் ஒரு இளைஞா் ஈரோடு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்யன் (35). இவரது மனைவி சரண்யா (28). வ... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு

கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரித்தது. ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்... மேலும் பார்க்க

ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கோபி நகராட்சி ஊழியா் கைது

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோபி நகராட்சி ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வருபவா் சுப்பிரமணியம் (... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா். ஈரோடு மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரௌடிகளின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவிட்டுள்ளாா். இதைய... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழப்பு

அந்தியூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. அந்தியூரை அடுத்த சின்னத்தம்பிபாளையம், தாசலியூா் காலனியைச் சோ்ந்தவா் சண்முகம் (50). இவா், அப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் பட்டி ... மேலும் பார்க்க