செய்திகள் :

பாதுகாப்புடன் பதிக்கபடும் எண்ணெய் குழாய்கள்: ஐஓசி துணை பொது மேலாளா் தகவல்

post image

எண்ணெய் குழாய்கள் பாதுகாப்பு வழிமுறைகளின்படி பூமிக்கு அடியில் பதிக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவன (ஐஓசி ) ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் துணை பொது மேலாளா் ஏ.ஆா்.சந்தோஷ் குமாா் தெரிவித்தாா்.

சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சி நிறுவனத்தில் தேசிய தொழில்நுட்ப தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக ஃபரிதாபாதில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் துணை பொது மேலாளா் ஏ.ஆா்.சந்தோஷ் குமாா் பங்கேற்று பேசியதாவது:

எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்கள் பூமிக்கடியில் குழாய் பதித்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை அனுப்பி வருகின்றன. இந்தக் குழாய்கள் மண் அரிப்பு மற்றும் விரிசல் ஏற்படாத வகையில் 3 அடுக்கு பாதுகாப்பு முறையில் பதிக்கப்படுகின்றன.

மேலும், குழாய்களில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால் நவீன தொழில்நுட்ப உதவியுடன் உடனடியாகக் கண்டறிந்து அவை சரி செய்யப்படுகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சி அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.வெங்கட்குமாா் (45). நுங்கம்பாக்கம் நெட... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் மே 31, ஜூன் 2-ல் ரத்து!

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!

காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ர... மேலும் பார்க்க

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க