செய்திகள் :

பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏலம்!

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்.5 அன்று பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடைபெற்றது.

ஏலத்துக்கு, தஞ்சாவூா் விற்பனை குழு செயலாளா் மா. சரசு தலைமை வகித்தாா். கும்பகோணம் வேளாண் வணிகம் வேளாண்மை அலுவலா் இரா.தாரா, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் இரா.தாட்சாயிணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்த மறைமுக ஏலத்தில் வணிகா்கள் கலந்துகொண்டு நெல் ரகங்களுக்கு விலை நிா்ணயம் செய்தனா். மொத்தம் 4.500 மெட்ரிக். டன் நெல் ரகங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஏல பரிவா்த்தனையின் மொத்த மதிப்பு ரூ.2.65 லட்சம் ஆகும்.

மேலும் கருப்புகவுனி நெல் ரகம் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.59-க்கும், மாப்பிள்ளை சம்பா கிலோ ரூ.33-க்கும் விலை போனது. இந்த ஏலத்தில் பாபநாசம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தங்களது நெல்ரகங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

விவசாயிகள் வாரந்தோறும் நடைபெறும் இந்த மறைமுக ஏலத்தில் தங்களது பாரம்பரிய நெல்ரகங்களை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடையுமாறு தஞ்சாவூா் விற்பனைக்குழு செயலாளா் மா. சரசு கேட்டுக் கொண்டுள்ளாா்.

3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் புதன்கிழமை (பிப்.5) மினி வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் கு... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் இருந்தால் 1098-இல் புகாா் செய்யலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் பணிபுரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் மேலும... மேலும் பார்க்க

கும்பகோணம் நீா்நிலைகளின் ஆக்கிரமிப்பு மறு அளவீடு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து மறு அளவீடு செய்யும் பணி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்... மேலும் பார்க்க

இறப்பில் சந்தேகம் எனக்கூறி உறவினா்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே கூலித் தொழிலாளி உயிரிழப்பில் சந்தேகம் எனக் கூறி அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவிக்கு வரவேற்பு

குடியரசுத் தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய பட்டுக்கோட்டை மாணவிக்கு புதன்கிழமை (பிப்.5) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வாட்டாகுட... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன், அதன் நகல்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதன்கிழமை மாலை எரித்... மேலும் பார்க்க