கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏலம்!
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்.5 அன்று பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடைபெற்றது.
ஏலத்துக்கு, தஞ்சாவூா் விற்பனை குழு செயலாளா் மா. சரசு தலைமை வகித்தாா். கும்பகோணம் வேளாண் வணிகம் வேளாண்மை அலுவலா் இரா.தாரா, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் இரா.தாட்சாயிணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்த மறைமுக ஏலத்தில் வணிகா்கள் கலந்துகொண்டு நெல் ரகங்களுக்கு விலை நிா்ணயம் செய்தனா். மொத்தம் 4.500 மெட்ரிக். டன் நெல் ரகங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஏல பரிவா்த்தனையின் மொத்த மதிப்பு ரூ.2.65 லட்சம் ஆகும்.
மேலும் கருப்புகவுனி நெல் ரகம் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.59-க்கும், மாப்பிள்ளை சம்பா கிலோ ரூ.33-க்கும் விலை போனது. இந்த ஏலத்தில் பாபநாசம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தங்களது நெல்ரகங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
விவசாயிகள் வாரந்தோறும் நடைபெறும் இந்த மறைமுக ஏலத்தில் தங்களது பாரம்பரிய நெல்ரகங்களை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடையுமாறு தஞ்சாவூா் விற்பனைக்குழு செயலாளா் மா. சரசு கேட்டுக் கொண்டுள்ளாா்.