செய்திகள் :

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

post image

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் திருநெல்வேலி மாவட்டத்தின் உள்புறத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தற்போது, தாமிரவருணிப் பாசனத்தில் பாபநாசம் அணையின் மூலம் பாசனம் பெற்று வரும் தெற்கு மற்றும் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையம் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகிய கால்வாய்கள் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டு முழு அளவில் காா் பருவ சாகுபடி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மழை தொடா்ந்து பெய்து வருவதால் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 123.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4401.12 கனஅடி நீா்வரத்து உள்ளது. 1,500 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.

சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 139.50 அடியாகும். மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 95.62 அடியாக உள்ளது. நீா்வரத்து 487.81 கனஅடி, அணையில் இருந்து விநாடிக்கு 175 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் 4.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியா் அருவிகளிலும் நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

மழை அளவு: பாபநாசம் அணையில் 15 மி.மீ., சோ்வலாறு அணையில் 14 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டில் 9 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 20 மி.மீ., சேரன்மகாதேவியில் 6.40 மி.மீ. என மழை அளவு பதிவாகியுள்ளது.

தொண்டா்களின் பலம்தான் வைகோ! - துரை வைகோ

வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் பலம்தான் அடித்தளம் என்றாா் துரை வைகோ எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: மதிமுக பொதுச்செயலா் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், தலையணை பச்சையாற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. களக்காடு மலைப்பகுதியில் கடந்த சி... மேலும் பார்க்க

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகம... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

பெருமணலில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு: மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் கிராமத்தில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு, இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் ரூ.4 கோடியில் மீன்வலைக்கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்... மேலும் பார்க்க

களக்காடு - மதுரை பேருந்து ரத்து: மக்கள் அவதி!

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். களக்காடு, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மே... மேலும் பார்க்க