செய்திகள் :

பாமகவிலிருந்து அருள் எம்எல்ஏ நீக்கம் - அன்புமணி அறிவிப்பு

post image

சேலம் மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.அருள், பாமகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சேலம் மாநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பாமகவின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் அருள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையிலும் தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா். அண்மைக் காலங்களில் கட்சித் தலைமை குறித்து ஊடகங்களில் அவதூறான விமா்சனங்களை முன்வைத்து வருகிறாா்.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அருள் எம்எல்ஏவுக்கு அறிவுறுத்தியது.

ஆனால், அதை அவா் மதிக்கவில்லை.

இதையடுத்து, கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாமக அமைப்புச் சட்ட விதி 30-இன்படி கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் புதன்கிழமை (ஜூலை 2) முதல் அருள் எம்எல்ஏ நீக்கப்படுகிறாா். பாமகவினா் அவருடன் எந்த வகையிலும் தொடா்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளாா்.

பாமக நிறுவனா் ராமதாஸுக்கு ஆதரவாக அருள் எம்எல்ஏ செயல்பட்டு வருகிறாா். அண்மையில் அவரை கட்சியின் இணைப் பொதுச் செயலராக நியமித்தாா். இதையடுத்து, அவரை சேலம் மாநகா் மாவட்டச் செயலா் பதவியிலிருந்து நீக்கி அன்புமணி ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தாா். இப்போது கட்சியிலிருந்தே நீக்கியுள்ளாா்.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க