செய்திகள் :

பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெரும்: ராமதாஸ்

post image

சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் பாமக நிறுவனா் ராமதாஸ்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் ஆக.10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் மாநாடு இடத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பூம்புகாரில் மகளிா் மாநாடு 13 முறை நடைபெற்றுள்ளது. சற்று இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் மகளிா் மாநாடு நடைபெறவுள்ளது. பெண்மையைப் போற்றும் வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்தப்படும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக இருக்கும் கூட்டணி தோ்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெறும். பாமக தொண்டா்களிடம் எவ்வித குழப்பமும் இல்லை. தமிழக கோயில்களில் நிதி உபரியாக இருந்தால் அதை கல்விக்காக பயன்படுத்துவதில் தவறில்லை. மத்திய அரசு தரவேண்டிய கல்வி நிதியை பெற்றுத்தர முயற்சிப்பேன் என்றாா்.

வன்னியா் மகளிா் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாரா என கேட்டதற்கு, போகபோக தெரியும் என்று பாடல் பாடி பதில் கூறினாா். திமுக கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு மழுப்பலான பதில் கூறினாா்.

பேட்டியின்போது, பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி, பாமக மாநில மகளிா் அணி தலைவா் சுஜாதா, மாவட்டச் செயலாளா் சக்திவேல், ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல அமைப்பு செயலாளா் முத்துக்குமாா், சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளா் துரை கோபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க