செய்திகள் :

பாமக 37-வது ஆண்டுவிழா! அன்புமணி கருத்துக்கு ராமதாஸ் மறுப்பு?

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமகவின் 37-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற்றது.

இவ்விழாவில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் பங்கேற்று தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள பெரியார், கார்ல் மார்க்ஸ், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, தைலாபுரம் தோட்டம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் பாமக கொடியை மருத்துவர் ச.ராமதாஸ் ஏற்றிவைத்து, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். இருப்பினும், கட்சித் தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணி பங்கேற்கவில்லை

அன்புமணியின் கருத்துக்கு முற்றுப்புள்ளி

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அன்புமணியின் கருத்து தொடர்பாக செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த மருத்துவர் ச.ராமதாஸ், அது அவரின் (அன்புமணி) தனிபட்ட கருத்து எனக் கூறி கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையும் படிக்க:மெல்ல விடைகொடு மனமே.. தாய்நாடு திரும்பும் பிரிட்டன் போர் விமானம்!

The 37th anniversary of the founding of PMK

தவெக கொடிக்கு எதிரான வழக்கு: விஜய் பதிலளிக்க உத்தரவு

சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

பள்ளிகளில் இருக்கை மாற்றத்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்ச... மேலும் பார்க்க

ஹுப்ளி - ராமநாதபுரம் சிறப்பு ரயில் ஆக.30 வரை நீட்டிப்பு

ஹுப்ளி - ராமநாதபுரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஆக.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஹுப்ளி - ராமநாதபுரம் இடையை வாராந்திர ... மேலும் பார்க்க

மனைவி கொலை: தொழிலாளி கைது

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிண்டி, லேபா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எழில் முருகன் (44). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறாா். இவரத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை தொடா்பாக, திமுக மாவட்டச் செயலா்களுடன் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை (ஜூலை 17) ஆலோசனை நடத்துகிறாா். இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் புத... மேலும் பார்க்க