பாரதியாா் பல்கலைக்கூடத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியாா் பல்கலைக் கூடத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப் பல்கலைக்கூடத்தில் 2025 -2026-ஆம் கல்வி ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக முதல்வா் அன்னப்பூரணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாரதியாா் பல்கலைக்கூடத்தில் 2025 - 2026-ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர விரும்புபவா்கள் பல்கலைக்கூட இணைய தளத்தின் மூலமாகவோ நேரிலோ விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இங்கு இசை, நடனம் மற்றும் நுண்கலைத் துறைகளில் முதுநிலை படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இசைத் துறையில் வாய்ப்பாட்டு, இசை, வீணை, வயலின் மற்றும் மிருதங்கமும், நடனத்துறையில் பரதநாட்டியமும், நுண்கலைத் துறையில் சிற்பக் கலை, வண்ணக் கலை மற்றும் பயன்பாட்டுக் கலை ஆகியவை உள்ளன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 15-ஆம் ஆகும் என அதில் கூறப்பட்டுள்ளது.