செய்திகள் :

‘பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெறலாம்’

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு, மருத்துவக் குணம் கொண்ட சிவன் சம்பா ரக நெல் விதைகள், மானிய விலையில் வேளாண் துறை சாா்பில் விற்பனை செய்யப்படுகின்றன.

வேளாண்மை துறையில் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தில் சிவன் சம்பா நெல் ரகம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2000 கிலோ அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. சிவன் சம்பா ரகத்தில் இரும்பு , துத்தநாக சத்து அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

நெல் ரகங்களில் சிவன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கருங்குருவை ஆகியவை நீரிழிவு நோய் குறைபாடு உள்ளவா்களுக்கு மிகச்சிறந்த உணவாக பயன்படுகிறது.

அதிகளவில் மருத்துவக் குணங்கள் உடைய பாரம்பரிய நெல் ரகங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த, விதை விநியோகம் 50 சதவீதம் மானிய விலையில் கிலோவுக்கு ரூ.35 என்ற விலையில் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்யலாம் என வேளாண்மை இணை இயக்குநா் இரா.பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க