செய்திகள் :

பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா! கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்!

post image

பாராட்டி பேச விரும்பிய லக்னௌ அணியின் உரிமையாளரை சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற தில்லி அணி வீரர் கே.எல்.ராகுலில் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. அதிரடியாக விளையாடிய தில்லி அணியின் கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 57* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். 

போட்டி முடிந்ததும் வீரர்களுடன் கைகொடுக்கும் நிகழ்வில் பங்கேற்ற கே.எல்.ராகுல் லக்னௌ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் கை கொடுத்துவிட்டு அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அவரிடம் பாராட்டி பேச வந்த சஞ்சீவ் கோயங்காவை அவர் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

அவரைத் தொடர்ந்து அவரது மகன் சஸ்வத்தும் பேச முற்பட்டார். ஆனால், கே.எல். ராகுல் விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த விடியோக்கள் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்தாண்டு கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னௌ அணி சரியாக விளையாடவில்லை. மேலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற மிகப் பெரிய தோல்வியால், மைதானத்திலேயே கடிந்துகொண்ட சஞ்சீவ் கோயங்கா ராகுலிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான விடியோக்கள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சரியாக விளையாடவில்லை என லக்னௌ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை தில்லி அணி ஏலத்தில் எடுத்தது. கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

மைதானத்தில் வைத்து அவமானப்படுத்தப்பட்டதற்கு அங்கு வைத்தே அவர் தனது ஆட்டத்தின் மூலம் திருப்பி கொடுத்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல். ராகுல் இந்தத் தொடரில், 3 அரைசதங்களுடன் 323 ரன்கள் குவித்து அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: விராட் கோலி, டேவிட் வார்னர் சாதனைகளை முறியடித்த கே.எல். ராகுல்!

போல்ட் 4 விக்கெட்டுகள், கிளாசன் அதிரடியால் மீண்ட சன்ரைசர்ஸ்: மும்பைக்கு 144 ரன்கள் இலக்கு!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் எடுத்தது.ஐபிஎல் 2025-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்ட... மேலும் பார்க்க

ரிவிவ் கேட்காமல் வெளியேறிய இஷான் கிஷன்: சூதாட்டமா?

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2025-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹை... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு: சன்ரைசர்ஸ் 300 ரன்கள் குவிக்குமா?

சன்ரைசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 2025ஆம் ஆண்டு ஐபிஎல்-இன் 41-ஆவது போட்டியில் ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் மும்பை இந்தியன்ஸ், ... மேலும் பார்க்க

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கவலையில்லை: காசி விஸ்வநாதன்

சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் இந்தத் தோல்விகளுக்கும் எல்லாம் கவலைப்பட மாட்டோம் எனக் கூறியுள்ளார்.நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 8இல் 6 போட்டிகளில் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்! - திலக் வர்மா

ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கிறது என்று இந்திய டி20 கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரருமான திலக் வர்மா தெரிவித்துள்ளார். ந... மேலும் பார்க்க

விராட் கோலி, டேவிட் வார்னர் சாதனைகளை முறியடித்த கே.எல். ராகுல்!

டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோரின் சாதனைகளை முறியடித்து தில்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர் கே.எல்.ராகுல் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிட்டல்ஸ் 8 வ... மேலும் பார்க்க