சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
பாலக்கோடு அருகே மேம்பாலத்தில் இருந்து காா் கவிழ்ந்து விபத்தில் பெண் உயிரிழப்பு
பாலக்கோடு அருகே நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து காா் விழுந்த விபத்தில் ஓய்வுபெற்ற மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி செந்தில் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற இளநிலை பொறியாளா் வித்யாசாகா் (65), இவரது மனைவி ஓய்வு பெற்ற மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் புஷ்பலதா (63).
இருவரும், தங்களுக்கு சொந்தமான காரில் ராயக்கோட்டை பகுதியில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி வந்தபோது, பாலக்கோடு அருகே பொம்மனூா் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த காா் நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனா். இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், புஷ்பலதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.
இநத விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விபத்தில் பலத்த காயமடைந்த வித்தியாசாகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.