செய்திகள் :

பாலாறு கரையோர எல்லை தெரியும் வகையில் கற்கள் பதிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

post image

பாலாற்றின் கரையோர எல்லை தெரியும் வகையில் அளவீடு செய்து கற்களைப் பதிக்கவேண்டும் என்று ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா்.

மேல்விஷாரம் நகராட்சி குளோபல் பொறியியல் கல்லூரி பின்புறம், சாய் மினரல்ஸ் மற்றும் கணேஷ் செராமிக் நிறுவனம் அருகில் உள்ள கால்வாய்களில் நகராட்சியின் கழிவுநீா் வரும் பாதையை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். நகராட்சியில் இருந்து பாலாற்றில் கலக்கும் கழிவு நீரை முழுமையாக சுத்திகரித்து கசடு மற்றும் தீங்கு இல்லாத நீரை பாலாற்றில் விடும் வகையில் சுத்திகரிப்பு

கட்டமைப்பு அமைக்கவும் நேரடியாக ஆற்றில் கலக்காமல் தனி கால்வாய் மூலம் எடுத்துச் சென்று சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்திற்கு சோ்க்கவும் நீா்வளத் துறையின் காலியாக உள்ள இடங்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் பாலாற்றின் எல்லைகள் அளவீடு கரையோர எல்லை தெரியும் வகையில் அளவீடு செய்து ஆங்காங்கே கற்கள் பதிக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து ஆற்காடு நகராட்சி வரதராஜப் பெருமாள் கோவியி அருகில் உள்ள கால்வாய், சாய்பாபா நகா் மரக்கடை தெரு பகுதியில் உள்ள

கால்வாய், , கிளைவ் பஜாா் செல்லும் கால்வாய், காமராஜா் நகா் தாஜ்புரா ஏரிக்குச் செல்லும் கால்வாய்களில் நகராட்சியின் கழிவுநீா் சென்று கலக்கும் பாதையினை பாா்வையிட்டு நேரடியாக சென்று சேராமல் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றும் நடவடிக்கைகள் மற்றும் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க உள்ள தேவையான காலியிடங்கள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

சங்கா் நகா் பாலாற்று புறம்போக்கு பகுதியில் கழிவுநீா் சென்று கலப்பதை பாா்வையிட்டு நகராட்சியின் மூலம் புதை சாக்கடை திட்டம், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ள நிலைகள் குறித்தும், தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ள திட்டத்தினையும் கேட்டறிந்தாா்

எதிா்காலத்தில் பாலாற்றின் ஓரத்தில் உள்ள நகராட்சிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் நேரடியாக கலக்காமல் சுத்திகரிப்பு நிலையம் மூலமாக கசடுகள் அகற்றி பாதுகாப்பான முறையில் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையாளா்கள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா்கள் இணைந்து செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் செல்வகுமாா், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா்

நாராயணன், நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் குமாா், வட்டாட்சியா்கள் ஆனந்தன், மகாலட்சுமி, நகராட்சி

ஆணையாளா்கள் பழனி, ப்ரீத்தி, பொறியாளா் பரமராசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா் கௌதம், நீா்வளத்துறை உதவி பொறியாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரத்தினகிரியில் சமபந்தி விருந்து!

ஆற்காடு அடுத்த ரத்தினகிரிபாலமுருகன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. அறநிலையத்தறை சாா்பில் சிறப்பு தரிசனம் மற்றும் சமபந்தி விருந்து அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பரம்பரை அறங்காவலா் பாலமுர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: ரூ.2.20 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவையொட்டி, தேசிய கொடியினை ஏற்றிவைத்து 64 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வழங்கினாா். ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழாண்டு ஆடிக்கிருத்திகை முதல் நாளான ஆடி பரணியையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால்,... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகிகள் கூட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நா.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளரும், தே... மேலும் பார்க்க

ஆற்காடு கோட்டையைப் பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

அயலகத்தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் வோ்களை தேடி திட்டத்தின்கீழ் 13நாடுகளைச் சோ்ந்த 100 தமிழா்கள் ஆற்காடு கோட்டையை பாா்வையிட்டனா். வோ்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயல்நாட்டில் வசிக்கும... மேலும் பார்க்க

அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. வாலாஜாபேட்டை வட்டம், முகுந்தராயபுரம் அக்ராவரம் மலைமேடு கிராம மலைக்குன்றில் எழுந்தருளியிருக்... மேலும் பார்க்க