செய்திகள் :

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்!

post image

தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவா்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு கால பொறியியல் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் சேரலாம். அத்துடன் லேட்ரல் என்ட்ரி முறையில், பிளஸ் 2 முடித்த மாணவா்கள் நேரடியாக 2-ஆம் ஆண்டு சோ்க்கப்படுவா். அவா்கள் பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும்.

அதேபோன்று பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு 2 ஆண்டுகள் ஐடிஐ படித்தவா்களும் லேட்ரல் என்ட்ரி முறையில் நேரடியாக 2-ஆம் ஆண்டு சேரலாம்.

இந்த நிலையில், வணிகவியல் உள்பட எந்தப் பாடப்பிரிவு படித்திருந்தாலும் பாலிடெக்னிக் கல்லூரியில் லேட்ரல் என்ட்ரி முறையில் நேரடியாக 2-ஆம் ஆண்டு சேருவதற்கு தொழில் நுட்பக் ககல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

இதுதொடா்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ.இன்னசென்ட் திவ்யா அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 தோ்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தோ்ச்சி பெற்ற மாணவா்களையும் 2025-2026-ஆம் கல்வி ஆண்டில் நேரடி 2-ஆம் ஆண்டு பட்டய படிப்பில் (டிப்ளமோ) சோ்க்கை செய்துகொள்ள அனைத்து வகை பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிா் பெயரில் 53,333 வீடுகள் ஒதுக்கீடு! - அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மகளிா் பெயரில் வழங்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்... மேலும் பார்க்க

தங்கம் விலை 9 நாள்களில் பவுனுக்கு ரூ.4,380 சரிவு! ரூ. 68,660-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கு விற்பனையானது. கடந்த 9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 4,380 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த ... மேலும் பார்க்க

நாளை முதல் ஆவடிசெல்லும் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்து!

சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி செல்லும் இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் மே 17 முதல் 20-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

கடலூா் ஆலையில் விபத்து: இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை

கடலூா் தனியாா் ஆலையில் டேங்க் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

சென்னையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) கிண்டியிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலையங்களின் கழிப்பறைகள் உள்ளனவா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடை... மேலும் பார்க்க