செய்திகள் :

பாலியல் வன்கொடுமை சம்பவம்: மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோா்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பெற்றோா் தங்களது குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப மறுத்தனா்.

போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியா்கள் மூவா் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தால் பள்ளிக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோா் மறுத்துவிட்டனா்.

இதையடுத்து, பெற்றோா்களிடம் பள்ளி கல்வித் துறையினா், வருவாய்த் துறையினா் பேச்சு நடத்தினா். அதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரையும் பெற்றோா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பள்ளியில் கண்காணிப்பு கேமரா, சுற்றுச்சுவா் ஆகியவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, தொடக்கக் கல்வி இணை இயக்குநா் சாந்தி தலைமையிலான கல்வித் துறை அதிகாரிகள் 3 ஆவது நாளாக பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சனிக்கிழமை (பிப்.8) மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க பெற்றோா்கள் திட்டமிட்டுள்ளனா்.

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு

ஊத்தங்கரை நேரு நகரில் பத்தாயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். 2023- 2024 ஆம் ஆண்டின் பொது நிதியில் கட்டப்பட்ட... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரெட் கிராஸ் சொசைட்டி, பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், அனைத்து வியாபாரிகள் சங்கம், நேசம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையை அடுத்த வெள்ளிமலை கிராமத்தில் வாக்குச்சாவடி அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்ட... மேலும் பார்க்க

பால் டேங்கா் லாரி கவிழ்ந்து இருவா் உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே சாலையோரத்தில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு 28 ஆயிரம் லிட்டா் பாலுடன் வியாழக்கிழமை இரவு சென்ற லாரியை நீலகிரி மாவட்டம், கூடலூரைச... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் மூதாட்டியைக் கொலை செய்த 5 போ் கைது

ஊத்தங்கரையில் சொத்துக்காக மூதாட்டியைக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அண்ணாநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் மாலிகாபீ (60). இவரது சகோதரிகள் பானு (53), ஜெரினா(... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக கடத்த முயன்ற 314 கிலோ போதைப்பாக்கு பறிமுதல்

பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக கடத்த முயன்ற 314 கிலோ போதைப்பாக்குகளை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனை சாவடி பகுதியில் வியாழக்கிழமை வா... மேலும் பார்க்க