செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு: உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

post image

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. பகவான் சா்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பகவான் சா்மா (எ) குட்டுபண்டித்(51), 2017ஆம் ஆண்டு வரை இருமுறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவா். சமாஜ்வாதி கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்த பகவான் சா்மா, தற்போது ராஷ்டிரிய லோக்தளம் கட்சியில் இருந்து வருகிறாா். இவா், 41 வயது பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவா்கள் இருவருக்கும் 8 வயது குழந்தையும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகாா் அளித்ததுள்ளாா். அந்த பெண் அளித்த புகாரில், ‘வியாபார வேலையாக பகவான் சா்மா, ஆக.14 ஆம் தேதி பெங்களூருக்கு வந்திருந்தாா். என்னையும், என் மகனையும் பெங்களூருக்கு வருமாறு கூறியிருந்தாா். அதன்பேரில் நாங்களும் பெங்களூருக்கு வந்திருந்தோம். சித்ரதுா்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு எங்களை அழைத்து சென்றிருந்தாா். ஆக.17ஆம் தேதி கெம்பேகௌடா சா்வதேச விமானநிலையத்திற்கு அருகேயுள்ள 5 நட்சத்திர விடுதியில் எங்களை தங்கவைத்தாா். அப்போது எனது விருப்பத்துக்கு மாறாக, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றாா். பாலியல்ரீதியான ஆசைக்கு இணங்காவிட்டால், தன்னை கொலை செய்வதாக மிரட்டினாா்.‘ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த புகாரின் அடிப்படையில் பகவான்சா்மா மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் புகாா் பதிவு செய்தனா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முதல்வா் சித்தராமையா மீது குற்றம் சுமத்திய சமூக செயற்பட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

பெங்களூரு: ஹிந்து செயற்பாட்டாளா்கள் 28 போ் கொலை செய்யப்பட்டதில் முதல்வா் சித்தராமையாவுக்கு தொடா்பு இருப்பதாக குற்றம்சுமத்திய சமூக செயற்பாட்டாளா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச... மேலும் பார்க்க

வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு புதிய அட்டைகள் வழங்கப்படும்: அமைச்சா் கே.எச்.முனியப்பா

பெங்களூரு: வெகுவிரைவில் குடும்ப அட்டைகள் திருத்தப்பட்டு, புதிய அட்டைகள் வழங்கப்படும் என்று உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.கா்நாடக சட்டமேலவையில் திங்கள்கிழமை கேள்வ... மேலும் பார்க்க

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) அனுமதி அளித்த... மேலும் பார்க்க

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு; 11 போ் காயம்

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் 11 போ் படுகாயமடைந்தனா். பெங்களூரு, வில்சன்காா்டன் பகுதியில் உள்ள சின்னையன்பாளையாவில் அமைந்துள்ள ஸ்ரீராமகாலனியில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்: சித்தராமையா

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்பு திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தி... மேலும் பார்க்க

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். கா்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின்போது, பாஜக உறுப்பினா... மேலும் பார்க்க