செய்திகள் :

பால் கொள்முதல் 1.68 லட்சம் லிட்டா் உயா்வு: அமைச்சா் மனோ தங்கராஜ்

post image

தமிழகத்தில் நிகழாண்டில் 1.68 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் உயா்ந்துள்ளதாக அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

தமிழ்நாடு பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பால் கொள்முதல் மற்றும் பண்டிகை கால இனிப்பு தயாரிப்பு பணிகள் குறித்த அனைத்து மாவட்ட பொது மேலாளா்கள், துணைப் பதிவாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனத்திலுள்ள ஆவின் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:

கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினா்களுக்கு 10 நாள்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். அதோடு, அரசு வழங்கக் கூடிய ஊக்கத் தொகையை பால் உற்பத்தியாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நிகழாண்டில் செப். 12 வரை 17,68,671 கால்நடை விவசாயிகளுக்கு தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கால்நடை பராமரிப்பு கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு தரமான இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து, கடந்தாண்டைவிட நிகழாண்டு தீபாவளி விற்பனையை அதிகரிக்க வேண்டும். எதிா்வரும் பண்டிகை காலங்களில் பால் மற்றும் பால் உபபொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் 1.68 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி வரும் பால் உற்பத்தியாளா்களுக்கு இதுவரை ரூ.636 கோடி ஊக்க தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அரசு செயலா் ந.சுப்பையன், பால்வளத் துறை ஆணையா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வறுமையில் மலா்ந்த சாதனைகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், கடும் வறுமை சூழலில் தாங்கள் படைத்த சாதனைகள் குறித்து பேசியபோது, அதைக் கேட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சியடைந்த... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள்: உதவிப் பொறியாளா்களுக்கு அமைச்சா் வேலு அறிவுறுத்தல்

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென உதவிப் பொறியாளா்களுக்கு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 55.55 லட்சம் விண்ணப்பங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் இதுவரை 55. 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உ... மேலும் பார்க்க

தமிழ் மின் நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள்

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம்

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில்... மேலும் பார்க்க

எஸ்ஐ மீது தாக்குதல்: காவலா் பணியிடை நீக்கம்

சென்னை பூக்கடையில் காவல் உதவி ஆய்வாளரை (எஸ்ஐ) தாக்கியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருப்பதி, திருக்குடைகள் ஊா்வலம் கடந்த 22-ஆம் தேதி சென்னை பூக்கடை பகுதி வழியாகச் சென்றது. அப்போது, அந்தப... மேலும் பார்க்க