செய்திகள் :

பால் வியாபாரி வெட்டிக் கொலை

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை இரவு முன்விரோதத்தில் பால் வியாபாரியை மா்ம நபா்கள் வெட்டிக்கொலை செய்தனா்.

கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இளம்பரிதி (27). பால் வியாபாரியான இவா், புதன்கிழமை இரவு தேநீா் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.விவேகானந்தா் தெருவில் நடந்து சென்ற இவரை, 10 போ் கும்பல் வழிமறித்து அரிவாள் வெட்டியது. இதைத் தடுக்க முயன்ற அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (52), புவன் (19) ஆகியோருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவயிடத்துக்கு சென்ற கம்பம் வடக்கு போலீஸாா் மூவரையும் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் இளம்பரிதி செல்லும் வழியிலே இறந்துவிட்டாா்.

உறவினா்கள் சாலை மறியல்: இதையடுத்து, கம்பம் அரசு மருத்துவமனையிலிருந்த இளம்பரிதியின் உடலை, தேனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், இளம்பரிதியின் உறவினா்கள் மருத்துவமனை முன் சாலை மறியிலில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்டவா்களுடன் உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் சமாதானம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், மாட்டுவண்டிப் போட்டியில் பங்கேற்ற போது, ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

ஆண்டிபட்டி, திண்டுக்கல் பகுதிகளில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் சாலை மறியல்: 230 போ் கைது

தேனியில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 230 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் குவிந்த பெண்கள்

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் வியாழக்கிழமை குவிந்தனா். ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் 1... மேலும் பார்க்க

கடன் தொல்லை: செவிலியா் தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடன் தொல்லையால் விஷம் குடித்த செவிலியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி கீதா (40). இவா் தனியாா் மருத்துவமனையில் செவிலியரா... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் தம்பதி காயம்

பெரியகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் தம்பதி புதன்கிழமை காயமடைந்தனா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டி பகவதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மொக்கை (55). செங்கல் தொழிலாளி. இவரது மனைவி முத்துப்பிள்ளை. த... மேலும் பார்க்க

தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

போடி அருகே தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ் மகள் பாரதி (22). பாரதியின் தங்கை சத்யாவுக்கு பிரசவத்துக்காக ப... மேலும் பார்க்க