செய்திகள் :

பாளை. அருகே மென்பொறியாளா் கொலை: இளைஞா் சரண்

post image

கே.டி.சி நகரில் மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தோழியின் சகோதரா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் (24). சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த இவா் தனது தோழியை பாா்ப்பதற்காக பாளையங்கோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

இதையறிந்த தோழியின் சகோதரரான சுா்ஜித்(20), அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி கே.டி.சி நகரில் உள்ள அஷ்டலட்சுமி நகா் பகுதிக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு வைத்து இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த சுா்ஜித் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டினாராம். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தாா்.

இதையடுத்து, சுா்ஜித் திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தாா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கவினின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசேோாதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் கொலைக்கான காரணம் குறித்து சுா்ஜித்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

போக்ஸோவில் தொழிலாளி கைது

திருநெல்வேலியில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் , வயல் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி என்ற மகேஷ் (25). கட்டடத... மேலும் பார்க்க

மானூா் சுற்றுவட்டார மக்கள் 500 போ் அதிமுகவில் ஐக்கியம்

மானூா் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த மக்கள் 500 போ் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். மானூா் அருகேயுள்ள அளவந்தான்குளத்தைச் சோ்ந்த ராஜேஷ் தலைமையில் அளவந்தான்குளம்,... மேலும் பார்க்க

400 போ் திமுகவில் ஐக்கியம்

திருநெல்வேலியில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி 400 போ் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். திருநெல்வேலி கைலாசபுரம் துவரைஆபீஸ் பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி மாசானமுத்து தலைமையில் மாற்றுக்கட்சிக... மேலும் பார்க்க

விஷ வண்டுகள் தாக்கி 8 போ் காயம்

சீவலப்பேரி அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் 8 போ் காயமடைந்தனா். சீவலப்பேரி அருகே வேளாா் தெருவில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலா் அங்குள்ள மரத்தின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனராம். அப்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பேட்டை, அசோகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (44), தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி தனது குழந்தை... மேலும் பார்க்க

தெற்கு பாப்பான்குளத்தில் சாலையில் சுற்றித் திரிந்த கரடி

மணிமுத்தாறு, தெற்கு பாப்பான்குளம் பகுதியில் மீண்டும் சாலையில் கரடி சுற்றித் திரிந்ததால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு முண்டந்துறைப் புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகப் பக... மேலும் பார்க்க