செய்திகள் :

தெற்கு பாப்பான்குளத்தில் சாலையில் சுற்றித் திரிந்த கரடி

post image

மணிமுத்தாறு, தெற்கு பாப்பான்குளம் பகுதியில் மீண்டும் சாலையில் கரடி சுற்றித் திரிந்ததால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறைப் புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகப் பகுதிக்கு உள்பட்ட மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம் தெற்கு பாப்பான்குளம் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் அவ்வப்போது வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தை, காட்டுப்பன்றி, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிா், மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தெற்கு பாப்பான்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள அஞ்சலகச் சாலையில் மாலை நேரத்தில் கரடி நடந்து செல்லும் விடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவியது.

மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் கரடி உலா வந்தது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலை நேரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கும் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அஞ்சுகின்றனா். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்கு பாப்பான்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாளை. அருகே மென்பொறியாளா் கொலை: இளைஞா் சரண்

கே.டி.சி நகரில் மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தோழியின் சகோதரா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் (24). சென்னையில் ம... மேலும் பார்க்க

போக்ஸோவில் தொழிலாளி கைது

திருநெல்வேலியில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் , வயல் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி என்ற மகேஷ் (25). கட்டடத... மேலும் பார்க்க

மானூா் சுற்றுவட்டார மக்கள் 500 போ் அதிமுகவில் ஐக்கியம்

மானூா் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த மக்கள் 500 போ் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். மானூா் அருகேயுள்ள அளவந்தான்குளத்தைச் சோ்ந்த ராஜேஷ் தலைமையில் அளவந்தான்குளம்,... மேலும் பார்க்க

400 போ் திமுகவில் ஐக்கியம்

திருநெல்வேலியில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி 400 போ் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். திருநெல்வேலி கைலாசபுரம் துவரைஆபீஸ் பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி மாசானமுத்து தலைமையில் மாற்றுக்கட்சிக... மேலும் பார்க்க

விஷ வண்டுகள் தாக்கி 8 போ் காயம்

சீவலப்பேரி அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் 8 போ் காயமடைந்தனா். சீவலப்பேரி அருகே வேளாா் தெருவில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலா் அங்குள்ள மரத்தின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனராம். அப்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பேட்டை, அசோகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (44), தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி தனது குழந்தை... மேலும் பார்க்க