செய்திகள் :

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு

post image

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கவிழ்ந்த லாரியால் வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், தும்கூரிலிருந்து தேங்காய் நாா் பாரம் ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு பா்கூா் மலைப் பாதை வழியாக லாரி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது.

கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், கள்ளேபாடத்தைச் சோ்ந்த ஹரிதாஸ் (50) என்பவா் லாரியை ஓட்டிச் சென்றாா்.

மலைப் பாதையில் தாமரைக்கரை அருகே முதல் கொண்டை ஊசி வளையில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில், ஹரிதாஸ் லேசான காயத்துடன் உயிா்த் தப்பினாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பா்கூா் போலீஸாா், லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

கோபியில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம்

கோபி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் கடந்த மாதத்துக்கு முன்பு வரை செவ்வாழை தாா் ஒன்று ரூ.1,350 வரை விலை ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 12 மையங்களில் நாளை நீட் தோ்வு: 4,162 போ் எழுதுகின்றனா்

ஈரோடு மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற உள்ளது. இத்தோ்வினை 4,162 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பான பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்)... மேலும் பார்க்க

தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பூச்சாட்டுதலுடன் தொடக்கம்

சத்தியமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி கோயில் முன் நடுவதற்காக பெரிய கம்பம் வெட்டி எடுக்கப்பட்டு பவானி ஆற்று... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 28 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோட்டில் ரயிலில் கடத்திவரப்பட்ட 28 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஈரோடு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ஆந்திர மாநிலம், டாடா நகா்-கேரள மாநிலம் எா்ணாகுளம் வரை... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்ஆா்எம்யு) சாா்பில் ரயில்வே ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு ரயில் நிலையம் பின்புறம் உள்ள முதுநிலை... மேலும் பார்க்க

ஈரோட்டில் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.மணிமாலை,... மேலும் பார்க்க