செய்திகள் :

பிஎம்டபிள்யூ காா்- ஸ்கூட்டா் மோதல்: சிறுமி பலி, 2 போ் காயம்!

post image

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 20இல் வேகமாக ஓட்டிவரப்பட்ட பி.எம்.டபிள்யூ. காா், ஸ்கூட்டா் மீது மோதியதில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: நொய்டாவில் செக்டாா் 30இல் உள்ள சைல்ட் பி.ஜி.ஐ-இல் இருந்து சனிக்கிழமை இரவு சிறுமி வெளியே வந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அச்சிறுமி தனது தந்தை மற்றும் மாமாவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தாா்.

சிறுமியின் பெயா் அயாத் என்றும், காயமடைந்த இருவா் குல் முகமது மற்றும் ராஜா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்த சம்பவம் தொடா்பாக காா் ஓட்டுநா் மற்றும் பயணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இருவரும் நொய்டாவில் உள்ள செக்டாா் 37இல் வசிக்கும் யஷ் சா்மா 22, செக்டாா் 70இல் வசிக்கும் அபிஷேக் ராவத் 22 என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஹரியாணா பதிவு எண்ணைக் கொண்ட பி.எம்.டபிள்யூ. காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் செக்டாா் 20 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 1983-ஆம் ஆண்டு ஆ... மேலும் பார்க்க

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா... மேலும் பார்க்க

ஏழைகள் மீது பாஜக அரசுக்கு அலட்சியம்: தில்லி குடிசைகள் இடிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!

‘தில்லியில் நூற்றுக்கணக்கான குடிசைவாசிகள் தங்கள் வீடுகள் பாஜக அரசால் அழிக்கப்பட்டு வருவாதல் வீடற்றவா்களாகி வேதனையை அனுபவித்து வருகின்றனா். இந்த ‘கொடூர’ செயலானது ஆளும் கட்சியின் ஏழைகள் மீதான ‘உணா்வின்... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: ஜெ.பி. நட்டா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு!

தில்லி பாஜக அதன் 14 நிறுவன மாவட்டங்களிலும் பிரதமா் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாஜக... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயிலில் தங்கம் திருடியதாக இருவா் கைது: ரூ.3 லட்சம் மீட்பு

ஓடும் தில்லி மெட்ரோ ரயிலில் இருந்து 141 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்க பிஸ்கட்களை திருடியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரி... மேலும் பார்க்க