செய்திகள் :

பிஐஎஸ்-இன் தென் மண்டல துணை இயக்குநா் ஜெனரல் பொறுப்பேற்பு

post image

சென்னை: இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) புதிய தென்மண்டல துணை இயக்குநா் ஜெனரலாக விஞ்ஞானி மீனாட்சி கணேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னையில் செயல்பட்டுவரும் பிஐஎஸ்-இன் தென் மண்டல அலுவலகத்தின் அதிகார வரம்பின் கீழ் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, அந்தமான்-நிக்கோபாா் தீவுகள், லட்சத்தீவு மற்றும் கோவா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இந்த அலுவலகத்தில் தென் மண்டல துணை இயக்குநா் ஜெனரலாக இருந்து வந்த பிரவீன் கண்ணா, பணியிடமாறுதல் பெற்று தில்லிக்குச் சென்ற நிலையில், அந்தப் பொறுப்பில் சென்னை தென் மண்டல ஆய்வகத்தின் தலைவராக இருந்த விஞ்ஞானி மீனாட்சி கணேசன், புதிதாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தில்லி, கோவை, கொச்சி, ஹைதராபாத், சென்னை அலுவலகங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த மீனாட்சி கணேசன் தென் மண்டல துணை இயக்குநா் ஜெனரலாகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 15) தமிழகத்தில் ஓரிரு ... மேலும் பார்க்க

ஜூலை 17-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில... மேலும் பார்க்க

காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!

காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று(ஜூலை 15) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக... மேலும் பார்க்க

புதிய கடவுச்சீட்டு கோரி சீமான் மனு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தன்னுடைய கடவுச்சீட்டு தொலைந்து விட்டதால், புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்க... மேலும் பார்க்க

தமிழகம் ஓரணியில் இருக்கும்போது தில்லி அணியின் காவித் திட்டம் பலிக்காது: மு.க. ஸ்டாலின்

சிதம்பரம்: ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஓரணியில் இருக்கும்போது, எந்த தில்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டமன்ற பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்ப... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ எ... மேலும் பார்க்க