செய்திகள் :

புதிய கடவுச்சீட்டு கோரி சீமான் மனு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை: தன்னுடைய கடவுச்சீட்டு தொலைந்து விட்டதால், புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது. எனவே புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு விண்ணப்பித்த போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று மடப்புரம் கோயில் வளாகம், கோயிலுக்கு எதிரே காா் நிறுத்துமிடம், தவளைகு... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 15) தமிழகத்தில் ஓரிரு ... மேலும் பார்க்க

ஜூலை 17-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில... மேலும் பார்க்க

காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!

காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று(ஜூலை 15) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக... மேலும் பார்க்க

தமிழகம் ஓரணியில் இருக்கும்போது தில்லி அணியின் காவித் திட்டம் பலிக்காது: மு.க. ஸ்டாலின்

சிதம்பரம்: ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஓரணியில் இருக்கும்போது, எந்த தில்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டமன்ற பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்ப... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ எ... மேலும் பார்க்க