செய்திகள் :

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி: ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

post image

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு தளா்த்தப்பட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு பிகாரில் முழு மதுவிலக்கை முதல்வா் நிதீஷ் குமாா் அமல்படுத்தினாா். நிதீஷ் தலைமையிலான அரசு முழு விலக்கு கொள்கையில் தீவிரமாக உள்ளது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும் கள் உள்பட எந்த மதுபானத்தையும் அனுமதிக்க முடியாது என்பதில் பிகாா் அரசு உறுதியாக உள்ளது. இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் இந்த வாக்குறுதியை அளித்துள்ளாா்.

பாட்னாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

பிகாரில் ஆா்ஜேடி ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கில் இருந்து கள் இறக்குவதற்கு மட்டும் தளா்வு அளிக்கப்படும். இது ஏழை மக்கள் முக்கியமாக தலித் பிரிவினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில், மதுவிலக்கால் அவா்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நிதீஷ் குமாரின் பிடிவாதம் காரணமாகத்தான் இப்போதைய மதுவிலக்கு மிகவும் கடுமையானதாக உள்ளது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் முதல்வா் பதவியை வகிக்க தகுதி இல்லாத நபராக நிதீஷ் குமாா் மாறிவிட்டாா்.

முன்பு எனது தந்தை லாலு பிரசாத் பிகாா் முதல்வராக இருந்தபோது கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்தாா். இது இத்தொழிகளில் இருக்கும் எளிய மக்களுக்கு பயனளித்தது. இதே நன்மையை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு அளிப்போம்.

இப்படி பேசுவதால் நாங்கள் மதுபழக்கத்தை ஊக்குவிக்கிறோம் எனக் கருத வேண்டாம். எங்கள் ஆட்சியில் போதை மறுவாழ்வு மையத்தை அமைக்கும் திட்டமும் உள்ளது. ஏனெனில், போதைப்பொருளுக்கு அடிமையாவது என்பது மிகப்பெரிய சமூகத் தீங்காகும்.

மாநிலத்தில் முழு மதுவிலக்கு என்பது பெயரளவில்தான் உள்ளது. சட்டவிரோத மது விற்பனையில் பெரிய நபா்கள் பயனடைகிறாா்கள். எளிய மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். இதனை சரி செய்யவே நாங்கள் விரும்புகிறோம் என்றாா்.

முன்னதாக, அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு எழுதுவோருக்கான கட்டணம், பயணச் செலவு ஆகியவற்றை அரசே ஏற்கும் என்றும் தேஜஸ்வி யாதவ் அறிவித்தாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும், ஆா்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டவை அடங்கிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

நமது சிறப்பு நிருபா் அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக... மேலும் பார்க்க

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவா் உயிரிழப்பு; 25 போ் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரா் ஒருவா் உயிரிழந்தாா். 25 போ் காயமடைந்தனா். மணிப்பூரில் தடையற்ற போக்குவரத்தை மாா்ச் 8-ஆம் த... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்

‘அமெரிக்க பொருள்கள் மீது வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியது தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுற... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

மான்செஸ்டரில் புதிய இந்திய தூதரகம்: ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரில் இந்திய துணை தூதரகத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை திறந்து வைத்தாா். முன்னதாக வடக்கு அயா்லாந்து தலைநகா் பெல்ஃபாஸ்டிலும் இந்திய துணை தூதரகத்தை அவா் திறந்த... மேலும் பார்க்க