செய்திகள் :

பிகாா்: ‘டொனால்ட் டிரம்ப்’ பெயரில் இருப்பிட சான்றிதழ் கோரப்பட்டதால் அதிகாரிகள் அதிா்ச்சி!

post image

பிகாரின் சமஸ்திபூா் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வசிப்பதாகக் கூறி இருப்பிடச் சான்றிதழ் கோரப்பட்டதால் அந்த மாநில அரசு அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.

பின்னா், அதிகாரிகளை ஏமாற்றும் வகையில் மா்ம நபா் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் நிலையத்தில் சமஸ்திபூா் மாவட்ட நிா்வாகம் புகாரளித்தது.

இதுதொடா்பாக சமஸ்திபூா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பெயா் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு அவா் சமஸ்திபூரின் ஹசன்பூா் கிராமத்தில் தங்கியிருப்பதாக கூறி கடந்த ஜூலை 29-ஆம் தேதி இணைய வழியில் இருப்பிட சான்றிதழ் விண்ணப்பம் ஒன்று பெறப்பட்டது.

அதில் டொனால்ட் டிரம்ப்பின் தந்தை மற்றும் தாயின் பெயரும் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை ஆகஸ்ட் 4-ஆம் தேதி வருவாய்த் துறை நிராகரித்தது.

பிகாரில் இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் மா்ம நபா் ஒருவா் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளாா்.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சமஸ்திபூா் சைபா் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடங்கியது முதல் ‘டாக் பாபு’, ‘டாகேஷ் பாபு’ என நாய்களுக்கும் ‘சோனலிகா டிராக்டா்’ என்ற பெயரில் போஜ்புரி நடிகையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தும் வசிப்பட சான்றிதழ் கோரப்பட்டது. இதுதொடா்பாக நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 64 ... மேலும் பார்க்க

தில்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: ஊழியர் பலி

தலைநகர் தில்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார். தலைநகர் தில்லியில் ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சர்வர் அறையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசு துணைத் தலைவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை: என்ன ஆனது? -கபில் சிபல் கேள்வி!

ஜகதீப் தன்கர் மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பன போன்ற சந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா:தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு த... மேலும் பார்க்க

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் புருலியா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பிடாக்கி கேட் அருகே சனிக்கிழமை தடம் புரண்டு மேல் பாதையில் விழு... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை கிடையாது: அமித் ஷா திட்டவட்டம்

நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், தங்களின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கவே, பிகாா் வாக்காளா்... மேலும் பார்க்க