செய்திகள் :

பினராயி விஜயன் பிறந்தநாள்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

post image

கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று(மே 24) தனது 80 ஆவது பிறந்தநாளினைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் மலையாளத்தில் பதிவிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில்,

கேரள முதல்வரும் எனது அன்புத் தோழருமான பினராயி விஜயனுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

முற்போக்கான அரசு நிர்வாகத்தின் மீதான தங்களது அர்ப்பணிப்பும், கூட்டாட்சியியல் மற்றும் மதச்சார்பின்மை மீதான நமது உறுதிப்பாடும் தமிழ்நாடு - கேரளம் உறவினை வலுப்படுத்துகின்றன.

நமது இரு மாநிலங்களும் இணைந்து நின்று நமது பண்பாட்டு உறவுகளையும் பொதுவான இலக்குகளையும் போற்றுவோம்! தாங்கள் நீண்டகாலம் உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன் என கூறியுள்ளார்.

கனமழை எச்சரிக்கை: கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் என்னென்ன..?

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீ... மேலும் பார்க்க

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம் தொடங்கியது

சென்னை சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம் தொடங்கியது... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்காக ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறி... மேலும் பார்க்க

நகை பறிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுப் பிடிப்பு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் கிராமம், வாழகுட்டை என்ற பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தோடு, மூக்குத்திகளை பறித்து சென்ற நபரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் சங்ககி... மேலும் பார்க்க

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இன்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கிய... மேலும் பார்க்க

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க