செய்திகள் :

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

post image

பிரதமர் நரேந்திர மோடியுடன், நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுள்ள சுசீலா கார்கி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.

நேபாளத்தில், சமூக வலைதளங்கள் தடை மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து, ஜென் - ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், அப்போதைய பிரதமர் சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, நேபாள அரசு கவிழ்க்கப்பட்டது.

நேபாள இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஆதரவுடன், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுசீலா கார்கி, கடந்த செப்.12 ஆம் தேதி இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், நேபாளத்தின் முதல் பெண் பிரதமரான சுசீலா கார்கி, இன்று (செப்.18) பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். பிரதமராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாளத்தின் வரலாறு காணாத புரட்சியின் மூலம் பிரதமரான சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும், நேபாள அரசின் முன்னுரிமைகளுக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என உறுதியளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த உரையாடலின்போது, நேபாளத்தில் புதியதாக பொது தேர்தல் நடத்துவதே இடைக்கால அரசின் முதல் நோக்கம் என பிரதமர் சுசீலா கார்கி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

Sushila Karki, who has been sworn in as the interim Prime Minister of Nepal, spoke to Prime Minister Narendra Modi over the phone.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய வங்கதேசத்தவரின் வாக்குகளைக் காப்பதே ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சியினரின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். 243 தொகுதிகளைக் கொண்ட... மேலும் பார்க்க

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

நேபாள இடைக்கால அரசின் பிரதமா் சுசீலா காா்கியுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி மூலம் பேசினாா். அப்போது, நேபாளத்தில் அமைதி-ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் அவரது முயற்சிகளுக்கு இந்தியாவின் வ... மேலும் பார்க்க

ஆளில்லா விமான செயல்திறனில் கவனம்: ராணுவ தலைமைத் தளபதி வலியுறுத்தல்

‘ஆளில்லா விமான செயல்திறனை மேம்படுத்துவதில் ராணுவம் கவனம் செலுத்த வேண்டும்’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வலியுறுத்தினாா். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் ... மேலும் பார்க்க

கடனை திரும்பச் செலுத்த மாலத்தீவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு: இந்தியா

மாலத்தீவு பெற்ற கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக இந்திய தூதரகம் வியாழக்கிழமை தெரிவித்தது. மாலத்தீவு அரசின் வேண்டுகோளை ஏற்று ரூ.440.63 கோடி கடனை திரும்பச்செல... மேலும் பார்க்க

‘அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்’: ஹிந்து கடவுளை அவமதித்த குற்றச்சாட்டில் தலைமை நீதிபதி விளக்கம்

அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வியாழக்கிழமை தெரிவித்தாா். கோயிலில் கடவுள் விஷ்ணுவின் சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான வழக்கில் ஹிந்து மத உணா்வுகளை பி.ஆா... மேலும் பார்க்க

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

ஹிமாசலில் பெய்த கனமழையால் தானும் பாதிக்கப்பட்டதாக எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.ஹிமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு மற்றும் வ... மேலும் பார்க்க