செய்திகள் :

பிரதமர் விழாவில் பங்கேற்காதது ஏன்? முதல்வர் விளக்கம்!

post image

பிரதமர் நரேந்திர மோடியின் பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

உதகையில் ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப். 6) தொடக்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

”உதகை விழாவில் பங்கேற்பதால் பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழாவிற்கு செல்ல முடியவில்லை. இதை முன்னதாகவே பிரதமரிடம் தெரிவித்துவிட்டேன். இவ்விழாவுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் சென்றுள்ளனர்.

பட்டினிச்சாவே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருக்கிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் டாப் கியரில் தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டத்துக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

* நீலகிரியில் சொந்தமாக வீடு இல்லாத ஏழைகளுக்கு ரூ. 26 கோடியில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் உருவாக்கப்படும்.

* ரூ. 10 கோடியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.

* நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகைக் கண்டு களிக்கும் வகையில் ஏறி இறங்கும் சுற்றுலா முறை அறிமுகம் செய்யப்படும்.

* நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வாழும் பழங்குடியினருக்கு ரூ. 10 கோடியில் 200 வீடுகள் கட்டித் தரப்படும்.

* ரூ. 20 கோடியில் பன்னடுக்கு கார் நிறுத்துமிடம் அமைக்கப்படும்.

* பழங்குடின மக்களுக்கு 23 சமுதாயக் கூடங்கள் கட்டித் தரப்படும்” என்றார்.

இதையும் படிக்க: உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!

கடலுக்குச் செல்ல வேண்டாம்: தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தூத்துக்குடி மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஏப். 10, 11) கடலுக்க... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை(ஏப். 10) மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை கால அட்டவணைபடி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நீட் விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் - விஜய்

நீட் விவகாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டமே ஒரு நாடகம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக அரசை விமர்சித்துள்ளார்.இது குறித்து தவெக தலைவர் விஜய் விடுத்துள்ள ... மேலும் பார்க்க

குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.வடபழனி ஏ.வி.எம். மின்மயானத்தில் குமரி அனந்தன் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? அரிய வாய்ப்பு!

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வரும் ஏப். 12 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்அறிவிக்கப்பட்டுள்ளது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமி... மேலும் பார்க்க

கோவை வந்தார் ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படைத் தளத்திற்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய இணை... மேலும் பார்க்க