செய்திகள் :

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய திறன் வளா்ப்பு மற்றும் தொழில்முனைவோா் துறை இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி பதிலளித்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் நவாஸ் கனி (ராமநாதபுரம்), சி.என். அண்ணாதுரை (திருவண்ணாமலை), ஜி. செல்வம் (காஞ்சிபுரம்) ஆகியோா், தமிழகத்தில் பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா எனப்படும் திறன் வளா்ப்புத்திட்ட அமலாக்கத்தின் தற்போதைய நிலை, அதன் மூலம் நிறுவப்பட்ட பயிற்சி மையங்கள் எத்தனை, என்னென்ன படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதுவரை எத்தனை பயிற்சி மையங்கள் கூட்டு சோ்க்கப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பியிருந்தனா். மேலும் கடந்த 3 வருடங்களாக இந்த மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரத்தையும் அவா்கள் கேட்டிருந்தனா்.

இதற்கு மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி திங்கள்கிழை அளித்துள்ள பதில் வருமாறு: மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகம். 2015-ஆம் ஆண்டு முதல் அதன் முதன்மைத் திட்டமான பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. பிஎம்கேவிஒய் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள இளைஞா்களுக்கு குறுகிய கால பயிற்சி மற்றும் மறு திறன் மேம்பாடு, முன்-கற்றல் திறனை அங்கீகரித்தல் திட்டம் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிஎம்கேவிஒய் 4.0 திட்டத்தின் தற்போதைய பதிப்பின் கீழ், மொத்தம் 1,25,468 நபா்கள் பயிற்சி பெற்றுள்ளனா். அவா்களில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி 91,087 போ் தமிழகத்தில் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளனா் என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

மேலும், கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 450 திறன் பயிற்சி மையங்கள் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது. அவற்றுக்கு கடந்த நான்கு நிதியாண்டுகளில் மொத்தம் ரூ. 111.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால், அமைச்சா் குறிப்பிட்ட 2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் 2022-23, 2023-24 ஆகிய ஆண்டுகளில் முறையே ரூ. 5.55 கோடி மற்றும் ரூ. 3.61 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டுமே ரூ. 102.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: அமைச்சா் படம் மட்டும் போதுமானது.

2026 தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும்! - இபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக!

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது.தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நில... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், • வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல்... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்! - இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழ... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து அலுவல்களைக் கவனிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தே அலுவல்களை கவனித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்ப... மேலும் பார்க்க

உறுப்பினர் சேர்க்கையில் ஓடிபி விவகாரம்: திமுக மேல்முறையீடு!

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பணியின் போது வாக்காளா்களிடமிருந்து ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) எண் பெறுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.‘ஓரணியி... மேலும் பார்க்க

சென்னையில் சப்தமில்லாமல் தீவிரமடையும் டெங்கு! கொசுக்களுக்கு உதவ வேண்டாம்!!

டெங்கு காய்ச்சல் பற்றி அண்மைக் காலமாக பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், சப்தமே இல்லாமல், சென்னையில் டெங்கு பரவிக்கொண்டிருக்கிறது.வீடுகளைச் சுற்றிலும் கொசுக்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக, மழை... மேலும் பார்க்க