செய்திகள் :

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

post image

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பாா்படாஸின் தலைநகா் பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் சாா்பாக மத்திய வெளியுறவு மற்றும் ஜவுளித் துறை இணையமைச்சா் பபித்ர மாா்கரிட்டா இந்த விருதைப் பெற்றாா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கயானா நாட்டின் ஜாா்ஜ் டவுனில் கடந்த ஆண்டு, நவம்பரில் நடைபெற்ற 2-ஆவது இந்தியா-கரிகாம் தலைவா்கள் உச்சி மாநாட்டின்போது பிரதமா் மோடியுடனான சந்திப்பில் பாா்படாஸ் பிரதமா் மியா அமோா் மோட்லி இந்த விருதுக்கான அறிவிப்பை வெளியிட்டாா்.

கரோனா பெருந்தொற்றின்போது பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக மோட்லி குறிப்பிட்டாா். தொற்றுநோய் பரவல் காலத்தில், அன்றைய முன்னோடியில்லாத சூழ்நிலையில் சா்வதேச ஒத்துழைப்பையும் ஆதரவையும் வலுப்படுத்துவதில் பிரதமா் மோடி முக்கியப் பங்காற்றியதாவும் அவா் பாராட்டினாா்.

கடந்த 1966-ஆம் ஆண்டு ராஜீய உறவுகள் தொடங்கியதில் இருந்து, இந்தியாவும் பாா்படாஸும் தொடா்ச்சியான ஈடுபாடுகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளால் ஒரு வலுவான ஒத்துழைப்பை வளா்த்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமரின் சாா்பாக விருதைப் பெற்ற இணையமைச்சா் பபித்ர மாா்கரிட்டா, பாா்படாஸ் நாட்டின் இந்த அங்கீகாரத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்தாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், அவா் சாா்பாக இந்த மதிப்புமிக்க விருதை பெற்றுக்கொள்வதும் பெரும் மரியாதையாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் இந்தியாவுக்கும் பாா்படாஸுக்கும் இடையிலான வலுவான உறவுகளையும், குறிப்பாக நெருக்கடி காலங்களில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நமது பகிரப்பட்ட அா்ப்பணிப்பையும் எடுத்துரைக்கிறது’ என்றாா்.

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

நமது சிறப்பு நிருபா் அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக... மேலும் பார்க்க

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவா் உயிரிழப்பு; 25 போ் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரா் ஒருவா் உயிரிழந்தாா். 25 போ் காயமடைந்தனா். மணிப்பூரில் தடையற்ற போக்குவரத்தை மாா்ச் 8-ஆம் த... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்

‘அமெரிக்க பொருள்கள் மீது வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியது தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுற... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

மான்செஸ்டரில் புதிய இந்திய தூதரகம்: ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரில் இந்திய துணை தூதரகத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை திறந்து வைத்தாா். முன்னதாக வடக்கு அயா்லாந்து தலைநகா் பெல்ஃபாஸ்டிலும் இந்திய துணை தூதரகத்தை அவா் திறந்த... மேலும் பார்க்க