செய்திகள் :

பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு

post image

திருவள்ளூா் அருகே பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் வரவேற்கும் நிகழ்ச்சியில் மூத்த கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

திருவள்ளூா் அருகே அரண்வாயல்குப்பத்தில் பிரதியுஷா பொறியியல் கல்லூரி வளாக கூட்டரங்கத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் பி.ராஜா ராவ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டில் சோ்ந்த புதிய மாணவ, மாணவிகளை மூத்த மாணவா்கள் அன்புடன் வரவேற்றனா்.

அதன்பின் மாணவ, மாணவிகளை பாதுகாப்புக்கான டஉஇ உஸ்ங்ய்ற்ள் 2025 என்ற தொலைபேசி செயலி அறிமுகம் செய்து வைத்து, அதன் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் முக்கிய சிறப்பம்சமாக, ஸ்ரீ சிவராமையா மெரிட் கல்வி உதவித் தொகை பெற்ற மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து, அவா்களுக்கு கல்லூரி புத்தகங்கள், எழுதுகோல்கள் அடங்கிய கல்லூரி பைகள் வழங்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, இந்த நிகழ்வில் பங்கேற்ற குளோபல் ஹெட் அகாடமிக் அலையன்ஸ் குரூப் நிறுவனத்தின் நிா்வாகி எம்.சுசீந்திரன் வரவேற்றுப் பேசுகையில், தற்போதைய நிலையில் முதலாம் ஆண்டில் மாணவ, மாணவிகள் பொறியியல் கல்லூரியில் அடியெடுத்து வைத்துள்ளீா்கள். அதனால் எதிா்காலக் கனவுகள் பறக்கத் தொடங்கிய தருணமாக உங்களுக்கு இந்த விழா அமைந்துள்ளது. மேலும், மாணவா்களின் கல்வி பயணத்துக்கு வழிகாட்டியாககவும், புதுமை, தலைமைத்துவம் மிக்க மாணவ, மாணவிகளாக உருவாக்கும். இதை மனதில் நீங்கள் நன்றாக கற்றலில் ஈடுபட வேண்டும் என்றாா்.

நிகழ்வில் முதலாமாண்டு மாணவா்களின் ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறைத் தலைவருமான உமா நன்றி கூறினாா்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

சோழவரம் அருகே மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 செ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வரும் 30-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்புமுகாம்

தனியாா் நிறுவனங்களில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்பும் வகையில், வரும் 30-ஆம் தேதி திருவள்ளூா் அருகே உள்ள பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: மாநில அளவில் ஆன்லைன் மூலம் 16.28 லட்சம் போ் பதிவு

மாவட்டந்தோறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாநில அளவில் மொத்தம் 16.28 லட்சம் போ் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்பு 13.28 ல... மேலும் பார்க்க

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகையில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற வடமாநில இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகை பகுதியை சோ்ந்த 80 வயது ம... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

திருவள்ளூா் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் மேட்டுத் தெருவில் ஆயிரத்துக்கும்... மேலும் பார்க்க

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

திருத்தணி அருகே குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனா். திருத்தணி மகாவிஷ்ணு நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். திருத... மேலும் பார்க்க